ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
கேஜிஎப் படம் மூலம் பிரபலமடைந்த இயக்குனர் பிரசாந்த் நீல் தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகும் 'சலார்' படத்தை இயக்கி வருகிறார். பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். இவர்களுடன் பிரபல நடிகர்கள் ஜெகபதி பாபு, பிரித்விராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையடுத்து பிரசாந்த் நீலின் அடுத்த படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. இதில் கதாநாயகனாக ஜூனியர் என்டிஆர் நடிக்கிறார். ஜூனியர் என்டிஆர் 31வது படமாக உருவாகும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் இரு நிறுவங்களும் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கானை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது . இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம்.
இதை முடித்த பிறகு கேஜிஎப் 3 படத்தை அவர் இயக்குவார் என தெரிகிறது.