புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
பாலிவுட் நடிகர் ஆமிர்கான் நடிப்பில் உருவான லால் சிங் சத்தா என்கிற படம் கடந்த வியாழனன்று வெளியானது. இந்த படத்தில் கரீனா கபூர் கதாநாயகியாக நடிக்க, முக்கிய இடத்தில் தெலுங்கு இளம் நடிகர் நாகசைதன்யா நடித்துள்ளார். அத்வைத் சந்தன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ஹிந்தி மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது. இதற்காக ஹைதராபாத், சென்னை என நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கூட ஆமிர்கான் கலந்து கொண்டார். தெலுங்கில் இந்த படத்தை நடிகர் சிரஞ்சீவி வெளியிட்டார்.
ஆனால் இந்த படம் ரிலீசுக்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே ஆமிர்கான் படத்தை புறக்கணியுங்கள் என்கிற ஹேஷ்டேக் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆனது.. ஆமிர்கான் இதற்கு முன்னதாக நடித்த பல படங்களில் இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக நடந்து கொண்டதால், இந்த படத்தை புறக்கணிக்க வேண்டும் என பலரும் சோசியல் மீடியாவில் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் படத்திற்கும் கூட எந்த மொழியிலும் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.
தற்போது இதை சுட்டிக்காட்டி உள்ள தெலுங்கு திரைகயுலகின் முன்னாள் சீனியர் நடிகை விஜயசாந்தி, ஆமிர்கானின் லால் சிங் சத்தா படத்திற்கு தோல்வியை பரிசளித்ததற்காக ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவிப்பதாக கூறியுள்ளார். மேலும் தெலுங்கில் இந்த படத்தை வெளியிடுவதற்காக திரையுலக பிரபலங்கள் என்னதான் துணையாக நின்றாலும் மக்கள் இந்த படத்திற்கு தர வேண்டிய சரியான ரிசல்ட்டை கொடுத்துள்ளனர்.. இனிவரும் நாட்களில் ஆமிர்கானை வைத்து படம் எடுக்க இருப்பவர்கள் அவர்களது படத்திற்கு என்ன விதமான ரிசல்ட் கிடைக்கும் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார் விஜயசாந்தி.