என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் |

நடிகர் விஷ்ணு விஷால் மகளுக்கு மிரா என்று பெயர் வைத்துள்ளார் ஹிந்தி நடிகர் அமீர்கான். ஐதராபாத்தில் நடந்த விழாவில் கலந்து கொண்டு விஷ்ணு விஷால், ஜூவாலா கட்டா தம்பதியர் மகளுக்கு இந்த பெயரை சூட்டியுள்ளார். விஷ்ணு விஷாலும், அமீர்கானும் எப்படி பழக்கம். இருவரும் ஒன்றாக கூட நடித்தது இல்லையே என்று விசாரித்தால், தனது அம்மா ட்ரீட்மென்ட்டுக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் தங்கியிருந்தார் அமீர்கான். அப்போது 2023ல் சென்னையில் பெரு வெள்ளம் ஏற்பட, அமீர்கான் தங்கியிருந்த சென்னை பழைய மகாபலிபுரம் வீடு பாதிக்கப்பட்டது.
அப்போது அவர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற விஷ்ணு விஷால் உதவி இருக்கிறார். அதிலிருந்து இரண்டு பேரும் நட்பாகி இருக்கிறார்கள். அந்த பழக்கத்தில் மனைவி, குழந்தை பேறு பிரச்னைகள் பற்றி அமீர்கானிடம் விஷ்ணு விஷால் விவரித்து இருக்கிறார். அதை கேட்டவர், மும்பைக்கு அவர்களை அழைத்து ஒரு நல்ல மருத்துவமனையில் ட்ரீட்மென்ட் எடுக்க சொல்லியிருக்கிறார்.
அந்த சமயத்தில் 10 மாதம் விஷ்ணு விஷால் மனைவியை மும்பையில் உள்ள அமீர்கான் அம்மா, சகோதரி கவனித்து இருக்கிறார்கள். அந்த பாசம், பிணைப்பில் குழந்தை பிறந்தவுடன் நீங்கதான் பெயர் வைக்கணும்னு என்று விஷ்ணு விஷால்-, ஜூவாலா தம்பதியர் கோரிக்கை வைக்க, அவரும் மும்பையில் இருந்து ஐதராபாத் வந்து மிரா என பெயர் சூட்டியிருக்கிறார்.