பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
பாலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சஞ்சய் லீலா பன்சாலி. கடைசியாக அவர் இயக்கத்தில் வெளிவந்த 'கங்குபாய் கத்தியவாடி' படம் கூடி ரூ.100 கோடி வசூலைத் தாண்டியுள்ளது. வித்தியாசமான படங்களைக் கொடுக்கும் பாலிவுட் இயக்குனர்களில் இவரும் ஒருவர்.
'புஷ்பா' படத்தின் மூலம் பாலிவுட்டிலும் ரூ.100 கோடி வசூலைப் பெற்ற நடிகராக தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன் அங்கும் தன்னுடைய தடத்தைப் பதித்துள்ளார். நேற்று இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியை அல்லு அர்ஜுன் சந்தித்துப் பேசியுள்ளார்.
'கங்குபாய் கத்தியவாடி' படத்திற்குப் பிறகு சஞ்சய் லீலா இயக்கப் போகும் படம் எது என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை. அல்லு அர்ஜுன் அடுத்ததாக 'புஷ்பா 2' படத்தில் விரைவில் நடிக்க உள்ளார். இந்தப் படத்திற்குப் பிறகு நடிப்பதற்காக சில கதைகளை அல்லு அர்ஜுன் கேட்டுள்ளதாகத் தெரிகிறது.
இருப்பினும் 'புஷ்பா' படத்தின் மூலம் கிடைத்த பான்-இந்தியா அந்தஸ்தைத் தக்க வைத்துக் கொள்ளும் விதமாக சஞ்சய் படத்தில் நடிக்கத்தான் நேற்று பேச்சு வார்த்தை நடத்தினாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அனைத்து மொழிகளிலும் 'புஷ்பா' நல்ல வசூலைப் பெற்றுள்ளதால் தனது அடுத்த படத்தை மிகவும் கவனமாக அல்லு அர்ஜுன் தேர்வு செய்வார் என்கிறார்கள்.