லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
மலையாள திரையுலகில் முதன்முறையாக சூப்பர்மேன் கதாபாத்திரத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் 'மின்னல் முரளி'. மாரி-2 படத்தில் வில்லனாக நடித்த டொவினோ தாமஸ் தான் இந்தப்படத்தில் சூப்பர்மேன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கோதா படம் மூலம் அவரை கமர்ஷியல் ஹீரோவாக மாற்றிய பஷில் ஜோசப் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
சூப்பர்மேன் கதை என்பதால் தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்திய படமாக உருவாகியுள்ள இந்தப்படம் கிறிஸ்துமஸ் ரிலீஸாக டிசம்பரில் வெளியாக உள்ளது. அந்தவகையில் பாலிவுட்டில் தனது படத்தை புரமோஷன் செய்யும் விதாமாக பிரபலங்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார் டொவினோ தாமஸ். சில தினங்களுக்கு முன் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை சந்தித்தார் டொவினோ தாமஸ். இந்தநிலையில் தற்போது பாலிவுட் நடிகர் சல்மான்கானை நேரில் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு பற்றி அவர் கூறும்போது, “எனது சினிமா பயணத்தை துவக்குவதற்கு முன்னரே உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளும் ஆர்வத்தை தூண்டியவர் நீங்கள் தான். ஆனால் நேரில் சந்தித்தபோது, இந்தியாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக இருக்கும் நீங்கள் எவ்வளவு எளிமையாக காட்சியளித்தீர்கள். அதனால் பணிவாக இருப்பதற்கும் கூட நீங்கள் தான் உந்துதலாக இருக்கின்றீர்கள்” என கூறியுள்ளார் டொவினோ தாமஸ்