கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா |
மலையாள திரையுலகில் முதன்முறையாக சூப்பர்மேன் கதாபாத்திரத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் 'மின்னல் முரளி'. மாரி-2 படத்தில் வில்லனாக நடித்த டொவினோ தாமஸ் தான் இந்தப்படத்தில் சூப்பர்மேன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கோதா படம் மூலம் அவரை கமர்ஷியல் ஹீரோவாக மாற்றிய பஷில் ஜோசப் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
சூப்பர்மேன் கதை என்பதால் தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்திய படமாக உருவாகியுள்ள இந்தப்படம் கிறிஸ்துமஸ் ரிலீஸாக டிசம்பரில் வெளியாக உள்ளது. அந்தவகையில் பாலிவுட்டில் தனது படத்தை புரமோஷன் செய்யும் விதாமாக பிரபலங்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார் டொவினோ தாமஸ். சில தினங்களுக்கு முன் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கை சந்தித்தார் டொவினோ தாமஸ். இந்தநிலையில் தற்போது பாலிவுட் நடிகர் சல்மான்கானை நேரில் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு பற்றி அவர் கூறும்போது, “எனது சினிமா பயணத்தை துவக்குவதற்கு முன்னரே உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளும் ஆர்வத்தை தூண்டியவர் நீங்கள் தான். ஆனால் நேரில் சந்தித்தபோது, இந்தியாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக இருக்கும் நீங்கள் எவ்வளவு எளிமையாக காட்சியளித்தீர்கள். அதனால் பணிவாக இருப்பதற்கும் கூட நீங்கள் தான் உந்துதலாக இருக்கின்றீர்கள்” என கூறியுள்ளார் டொவினோ தாமஸ்