22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை | அஜித்தை சந்தித்த நடிகர் சதீஷ் |
சர்ச்சைகளையும், கங்கனா ரணவத்தையும் பிரிக்கவே முடியாது போலிருக்கிறது. முன்னாள் பிரதமர் இந்திரா, காலிஸ்தான் தீவிரவாதிகளை கொசுவை நசுக்குதுபோல நசுக்கினார் என்று கூறிய கையோடு டில்லியில் போராடிய விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகளோடு ஒப்பிட்டு பேசினார். இது சீக்கிய சமூகத்தை சேர்ந்தர்களை புண்படுத்துவதாகவும், கங்கனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டில்லி சிரோண்மணி குருத்வாரா கமிட்டி சார்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து கங்கனா மீது இந்திய தண்டனை சட்டம் 295வது பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்படலாம் என்கிற சூழல் நிலவுகிறது. இதற்கெல்லாம் பயப்படுகிறவரா கங்கனா... சமூகவலைதளத்தில் தான் ஒயின் கோப்பையுடன் கவர்ச்சியாக இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இன்னொரு நாள், இன்னொரு எப்.ஐ.ஆர் ஒரு வேளை என்னை அவர்கள் கைது செய்ய வந்தால், நான் வீட்டில் வேறொரு மூடில் இருக்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.