'ஜானு பாப்பா' என அழைக்கும் ரசிகர்கள் : ஜான்வி கபூர் மகிழ்ச்சி | பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் |
சமூக வலைதளங்களில் வெறுப்புணர்வை துாண்டும் வகையில் பதிவு களை வெளியிடுவதாக கூறி, நடிகை கங்கனாவுக்கு டில்லி சட்டசபையின் அமைதி மற்றும் நல்லிணக்க குழு , சம்மன் அனுப்பியது.
தனது துணிச்சலான கருத்துக்களால் தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறார் நடிகை கங்கனா ரணவத், அதே அளவிற்கு அவருக்கு எதிர்ப்புகளும் உருவாகி வருகிறது. அவரது கருத்துக்கள் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாட்டுக்கு ஆதரவான கருத்தாக பார்க்கப்படுவதால் எதிர்கட்சிகள் அவர் மீது குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் கங்கனா ரணவத் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டில்லியில் போராடிய சீக்கிய விவசாயிகளை அவர் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று குறிப்பிட்டதாக அவர் மீது டில்லி குருத்வாரா கமிட்டி போலீசில் புகார் அளித்தள்ளது. போலீசாரும் கங்கனா மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த நிலையில் டில்லியின் அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக கூறி டில்லி சட்டசபையின் அமைதி மற்றும் நல்லிணக்க குழு கங்கனாவுக்கு சம்மன் அனுப்பி உள்ளது. சட்டசபையில் நேரில் ஆஜராகி தனது கருத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு நடிகைக்கு சட்டசபையின் சம்மன் அனுப்புவது இதுவே முதல் முறை என்கிறார்கள்.