ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
நடுக்கடலில் சொகுசு கப்பலில் போதை விருந்தில் கலந்து கொண்ட ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 20 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஆர்யன் கான் தற்போது ஜாமீனில் விடுதலை ஆகியுள்ளார். இந்த வழக்கில் ஷாருக்கானின் மானேஜர் பூஜா தத்லானியும் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்த கடந்த புதன் கிழமை (நேற்று) ஆஜராகுமாறு போதை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் நேற்று அவர் ஆஜராகவில்லை. தனக்கு உடல்நலம் சரியில்லை என்று தனது வழக்கறிஞர் மூலம் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கில் பூஜாவின் சாட்சியம் மிகவும் முக்கியமானது. அதனால் அவரை விசாரணையில் இருந்து விடுவிக்கும் பேச்சுக்கே இடமில்லை. உரிய அவகாசம் வழங்கி அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பபடும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.