பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
கடந்த, 1980 -- 90களில், தமிழ் திரையுலக ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர், நடிகை ராதா. சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு என, முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்து, வெற்றிப்படங்களை கொடுத்தவர். அவர், நமக்கு அளித்த பேட்டி:
அம்மா சொல்லி தான் நடிக்க வந்தேன். அவர் சொல்லி தான், திருமண வாழ்க்கையும் ஆரம்பமானது. சினிமா, குடும்ப வாழ்க்கை, இரண்டுமே மகிழ்ச்சியாக அமைந்தது. ஆனால், எனக்கு ரொம்ப பிடித்தது, சினிமா தான். நாட்டிலேயே, நம்பர் - 1 சினிமா ரசிகை, நான் தான். எந்த மனநிலையில் இருந்தாலும், சினிமா தான் எனக்கு மருந்து; விருந்து. எல்லா நாயகர்கள், நாயகியருடனும் நடித்துள்ளேன். இரண்டு நாயகியர் கொண்ட படங்களில் நிறைய நடித்துள்ளேன். குறிப்பாக, அக்கா, அம்பிகாவுடன் நிறைய படங்களில் நடித்தேன். யாருடன் நடித்தாலும், நடிப்பதில் தான் போட்டி இருந்தது; பொறாமை இருந்ததே இல்லை.
![]() |
சிவாஜி சாருடன், முதல்மரியாதை படம் மறக்கவே முடியாது. சினிமாவில் மட்டுமின்றி, கதாபாத்திரத்திலும் நிஜமாகவே முதல்மரியாதை தரக்கூடிய ஒரு பெரிய மனிதருடன் நடிப்பதற்கு, அந்த கதாபாத்திரமாகவே மாற வேண்டியிருந்தது. அதற்கே, மூன்று நாட்கள் ஆகிவிட்டது. என் சினிமா வாழ்க்கையில் முதல் மரியாதைக்குரிய படம் அது.
![]() |
ரஜினியை ரசிகையாக பார்த்த போது, அவரது, ரப் அண்டு டப் தோற்றத்துடன், ஸ்டைல் என்னை வியக்க வைத்தது. ரசிகை என்பதில் இருந்து மாறி இருவருடனும் நடித்த போது, நடிகர்களாக ரஜினி, கமல் யார் என புரிந்தது. இயக்குனர் என்ன சொல்கிறாரோ, அதை தன் ஸ்டைலில் ரஜினி நடிப்பார். ரொம்ப சிம்பிளான மனிதர்.
![]() |
இப்போது வரும் பிரமாண்ட படங்களை பார்க்கும்போது, ரொம்ப பொறாமையாக இருக்கிறது. ஆங்கிலப் படங்களே தோற்றுப்போகும் அளவுக்கு, தமிழில் பிரமாண்ட படங்கள் வருகின்றன. நாம் நடிக்கும் போது, இந்த மாதிரி எல்லாம் ஏன் வரவில்லை என நினைப்பேன். எல்லா முன்னணி நடிகருடனும் நடித்திருக்கிறேன். ஆனால், என் சினிமா காலத்தில், ராமராஜன் உடன் நடிக்கவில்லை. அப்போது அவர், இயக்குனர் ராமநாராயணனின் அசிஸ்டென்ட்டாக இருந்தார். அதன் பின் தான் நடிக்க வந்தார். அவருடன் நடிப்பதற்கான கதைக்களம் அமையவில்லையே தவிர, நானும் அக்காவும், அவர் பணியாற்றிய படங்களில், நிறைய நடித்தோம்.
![]() |
எனக்கு நடனம் மிகவும் பிடிக்கும். அதனால், சின்னத்திரையில் ஷோக்களில் நடுவராக பங்கேற்று வருகிறேன். சினிமாவை விட்டு நான், என்றுமே விலகியதில்லை. நான் மீண்டும் சினிமாவுக்கு, எப்படி; எந்த வகையில் வருவேன் என தெரியாது. ஆனால், நிச்சயம் வருவேன். புதிய பரிணாமத்தில் பார்ப்பீர். இவ்வாறு அவர் கூறினார்.
![]() |