தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் |

நடிகரும் இசையமைப்பாளமான ஜி.வி.பிரகாஷ் குமார் தான் நடித்த பிளாக்மெயில் படம் குறித்து பேசினார். அப்போது அவர் இசையமைப்பாளராக, நடிகராக பல படங்களுக்கு சம்பளம் வாங்கவில்லை. பல படங்களுக்கு சம்பளத்தை விட்டுக் கொடுத்து உள்ளேன் என்றார். குறிப்பாக, காக்கா முட்டை, சைவம் படங்கள் குழந்தைகள் சம்பந்தப்பட்ட படம் நல்ல கதை என்பதால் சம்பளம் வாங்கவில்லை. இயக்குனர் வசந்தபாலன் தன்னை அறிமுகப்படுத்தியதால் அவரின் அநீதி படத்துக்கு சம்பளம் வாங்கவில்லை. அதேபோல் வெற்றிமாறனின் விசாரணை படத்துக்கும் சம்பளம் வாங்கவில்லை என்ற புது தகவலை சொன்னார்.
மேலும் அவர் இசையமைப்பாளராக தனது படங்களின் வியாபாரத்தைப் பொறுத்து சம்பளம் வாங்குகிறேன் என்றார். தான் நடித்த, இசை அமைத்த படங்கள் பைனான்ஸ் பிரச்னையால் தவிக்கும்போது அவற்றின் ரிலீஸுக்காக சம்பளத்தை விட்டுக் கொடுப்பதாக ஜிவி பிரகாஷ் குமார் கூறினார். இப்படி விட்டுக் கொடுத்த சம்பளத்தின் மதிப்பு பல கோடி இருக்கும் என்ற தகவலும் கூறினார். பிளாக்மெயில் படம் வெளியாகவும் அவர் கணிசமான தொகையை விட்டு கொடுத்து இருப்பதாக தகவல்.