பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
மின்மினிகளாக மின்னும் கண்மணிகள்... சிந்தாமல் சிந்தும் சிரிப்பு சிதறல்கள் என மேயாத மான் படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி நம் மனதைகொள்ளையடித்து, களத்தில் சந்திப்போம்ல் கலக்கிய நடிகை பிரியா பவானி சங்கர் மனம் திறக்கிறார்...
* களத்தில் சந்திப்போம் படம் பற்றி
ஜீவா, அருள்நிதி என இரண்டு ஹீரோ. நான் அருள்நிதிக்கு ஜோடி. மஞ்சுமா தான் ஹீரோயின். நான் அருள்நிதியுடன் கொஞ்சம் வந்து போறேன். படம் பார்க்கும் பசங்க நட்பை நினைச்சு பார்ப்பாங்க. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் சூப்பர்.
* எப்படி ஒரு கதையில் நடிக்க முடிவு எடுப்பீர்கள்
படத்தின் தயாரிப்பாளர் யாருன்னு பார்ப்பேன். இன்றைய சூழலில் பெரிய தயாரிப்பாளர்களே அதிக படம் கொடுக்குறது இல்லை. அதனால் தயாரிப்பு அப்புறம்; கதை நல்லா இருக்கான்னு பார்த்த தான் முடிவு எடுப்பேன்.
என்னை டிவியில் பார்த்த பார்வையாளர்கள் இப்போ சினிமாவில் பார்க்கிறார்கள். ரசிகர்கள் ஈஸியா கிடைக்க மாட்டாங்க. டிவி வாய்ப்பை சரியா பயன்படுத்துறேன்னு நம்புறேன், டிவியில் இருந்து வந்து 2 படம் நடிச்சுட்டு போயிட்டாங்கனு தவறான உதாரணமாக விரும்பலை.