நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

சென்னை பொண்ணு. செல்ல பெயர் கெமி. அப்பா ராஜ்பிரகாஷ் மகாராஷ்டிரா, அம்மா சுஜாதா கேரளா. நான் முதலில் ஒரு தடகள வீராங்கனை. மாநில அளவில் 100 மீட்டர் ஓட்டம், குண்டு எறிதலில் வெள்ளி பதக்கம் பெற்றேன். தேசிய போட்டியிலும் சாதனை படைத்துள்ளேன். பயிற்சியாளர், பெற்றோரின் ஆதரவுடன் பின்னர் கூடைப்பந்து வீராங்கனையாக என்னை வளர்த்து கொண்டேன். பாங்காக்கில் நடந்த ஆசிய சாம்பியன் ஷிப் கூடைப்பந்து போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்று வெள்ளி பதக்கம் பெற்றுள்ளேன்.
சாதிக்க துாண்டியது
கோயம்புத்துாரில் நடந்த 'மிஸ் தமிழ்நாடு' போட்டியில் பங்கேற்றேன். இந்த போட்டி என்னை அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லவில்லை. ஆனால் இந்த போட்டி தளம் தான் வாழ்வில் எப்படி சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கையை எனக்கு கற்று தந்தது. அதற்கு பிறகு நான் ஒரு மாடலாக வலம் வர பலவித போட்டோ ஷூட்களை எடுத்தேன். தற்போது முன்னணி நிறுவனங்களுக்கு மாடலாகவும், சில திரைப்படங்களிலும் நடித்துள்ளேன்.
துபாயில் சிலகாலம் பணிபுரிந்தேன். அங்கு எனக்கு பிடித்த உணவு கிடைக்கல. அதனால நானே யுடியூப் மூலம் சமையல் கலையை கற்றேன். இதனால் தனியார் டிவி., சமையல் கலை போட்டிகளில் பங்கேற்றேன். நான் சிறுவயது முதலே உணவு பிரியை. குறிப்பாக மீன் அதிகம் பிடிக்கும். விரும்பி சாப்பிடுவது பிரியாணி. சிறுவயதில் பொருளாதாரத்திற்கு சிரமம் அடைந்தாலும் 16 வது வயதில் இருந்தே கூடைப்பந்து போட்டிகளில் பெற்ற வெற்றி மூலம் கிடைத்த பரிசு தொகையை, என் வீட்டிற்கு கொடுத்து உதவினேன். படிக்கும் போதே பகுதி நேர வேலைவாய்ப்பு மூலம் வருவாய் ஈட்டினேன். இன்னும் கிடைக்கும் வருவாய் மூலம் எதிர்காலத்தில் ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்கு உதவுவேன்.
எனக்கு கார் எளிதாக கிடைக்கவில்லை. டூவீலர் தான் எளிமையாக கிடைத்தது. 10 வயதில், ஸ்கூட்டர் ஓட்ட பழகினேன். என் அம்மாவின் டூவீலரை அவருக்கு தெரியாமல் ஓட்டி அடி வாங்கியுள்ளேன். அப்படி தான் எனக்கு டூவீலர் ஓட்டும் ஆர்வம் வந்தது. டூவீலரில் சுற்றுலா தலங்களுக்கு சென்றால், மனசு 'ரிலாக்ஸ்' ஆக இருக்கும். இதனால் தான் 'டூவீலரை' இன்றைக்கும் காதலிக்கிறேன்.
நடனம் ஆடுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். பள்ளியில் 8ம் வகுப்பு வரை எந்த மேடை நிகழ்ச்சி வந்தாலும், விடாமல் பங்கேற்பேன். பரதநாட்டியம் கற்றுக்கொண்டேன். குரல் வளம் தான் எனது பெரிய அடையாளம். என் தனித்திறமையை வெளிக்காட்ட குரல் பெரிதும் உதவியது.
நயன்தாரா, கவின், சசிக்குமார் ஆகியோருடன் திரைப்படங்களில் நடித்துள்ளேன். நடிகைகள் மனோரமா, கோவை சரளா ஆகியோரின் குரல் எனக்கு எளிதில் வருவதால், அவர்களை போன்றே சினிமாவில் வாய்ப்பு கிடைத்தால் சாதிப்பேன்.
நம்பிக்கை, எவ்வித எதிர்பார்ப்பு இன்றி உழைத்தால் எதிர்பார்க்காத வளர்ச்சியை எட்டிபிடிக்கலாம். அந்த எண்ண ஓட்டத்தில் தான் நான் அன்றாடம் உழைத்து வருகிறேன் என்றார்.