பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி தற்போது தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப கதையம்சம் கொண்ட தொடர்களை வழங்கி டிஆர்பியில் எட்டிப் பார்க்க ஆரம்பிந்துள்ளது. அந்த வகையில் கலர்ஸ் தமிழின் முக்கிய தொடர்களில் ஒன்றாக 'சில்லுன்னு ஒரு காதல்' ரசிகர்களின் மனதை தொட்டுள்ளது. இதுவரை 275 எபிசோடுகளை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடரில் சமீர் அஹமது, தர்ஷினி கெளடா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சீரியலின் வெற்றிக்கு முதுகெலும்பாக இருந்து வந்த அதன் இயக்குநர் சுரேஷ் ஷண்முக தொடரை விட்டு தற்போது விலகியுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் மிகவும் உருக்கமான பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். டெக்னீசியன்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிடுள்ள சுரேஷ், 'பிரசவத்தில் குழந்தையை பறிகொடுத்த தாயை போன்ற என் நிலை...' என சீரியலை விட்டு போவதை மிகவும் உருக்கமாக பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.