சூர்யா 46 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்! | மகன் இயக்கியுள்ள படம் குறித்து ஷாருக்கானின் நேர்மையான விமர்சனம் | நடிகர் சங்கத்தில் மீண்டும் சேருவேனா ? நடிகை பாவனா பதில் | டாம் குரூஸ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் ? பஹத் பாசில் விளக்கம் | ரஜினியின் ‛கூலி' படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவை ஆலியா பட்டுக்கு போட்டியாக சித்தரிக்கும் பாலிவுட் ஊடகங்கள்! | பலாத்காரம் செய்யப்பட்டாலும் பெண்களைத்தான் குறை சொல்கிறார்கள்! -கங்கனா ரணாவத் ஆவேசம் | தனுஷின் ‛இட்லி கடை'யில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ஷாலினி பாண்டே! | 58 வயதிலும் தீவிர ஒர்க்அவுட்டில் ஈடுபடும் நதியா! |
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி தற்போது தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப கதையம்சம் கொண்ட தொடர்களை வழங்கி டிஆர்பியில் எட்டிப் பார்க்க ஆரம்பிந்துள்ளது. அந்த வகையில் கலர்ஸ் தமிழின் முக்கிய தொடர்களில் ஒன்றாக 'சில்லுன்னு ஒரு காதல்' ரசிகர்களின் மனதை தொட்டுள்ளது. இதுவரை 275 எபிசோடுகளை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த தொடரில் சமீர் அஹமது, தர்ஷினி கெளடா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து அசத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சீரியலின் வெற்றிக்கு முதுகெலும்பாக இருந்து வந்த அதன் இயக்குநர் சுரேஷ் ஷண்முக தொடரை விட்டு தற்போது விலகியுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் மிகவும் உருக்கமான பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். டெக்னீசியன்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிடுள்ள சுரேஷ், 'பிரசவத்தில் குழந்தையை பறிகொடுத்த தாயை போன்ற என் நிலை...' என சீரியலை விட்டு போவதை மிகவும் உருக்கமாக பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.