அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
சின்னத்திரை பிரபலங்களான மதன் - ரேஷ்மா ஜோடி தங்கள் காதல் குறித்து வெளிப்படையாக அறிவித்தனர். இது குறித்து கேள்விக்கு பதிலளித்துள்ள அவர்கள் வேலைக்காக ஏன் காதலை மறைக்க வேண்டும் என கூறினர்.
சின்னத்திரையில் பிரபலமான மதன் - ரேஷ்மா இருவரும், ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியலில் நடித்து பிரபலமாயினர். இவர்கள் இருவரும் தங்கள் காதல் விவகாரம் குறித்து கடந்த ஜனவரி மாதம் வெளியுலகிற்கு தெரிவித்தனர்.
தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் "அபி டெய்லர்" தொடரில் ஜோடியாக நடித்து வரும் இருவரிடமும் சமீபத்தில் பேட்டி எடுக்கப்பட்டது. அதில் சினிமா நடிகர், நடிகைகள் தங்களுடைய ரிலேஷன்ஷிப்பை வெளிப்படையாக கூறாதபோது, நீங்கள் எப்படி சொன்னீர்கள்? என்ற கேள்வி எழுப்பபட்டது.
அதற்கு பதிலளித்த மதன் - ரேஷ்மா ஜோடி,வேலைக்காக காதல் வாழ்க்கையை ஏன் மறைக்க வேண்டும்?. அதேநேரம் தங்களுடைய தனிப்பட்ட விருப்பங்களை மறைப்பதிலும் தவறு ஒன்றும் இல்லை. என கூறினர்.
மேலும், தங்களுடைய வாழ்க்கையை சமூகவலைதள பக்கங்கங்களில் பகிர்ந்து கொள்வதில் தாங்கள் மகிழ்ச்சியடைவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.