இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
பிரபல நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி இன்று சினிமா, சீரியல், வெப் சீரிஸ் என அனைத்திலும் கலக்கி வருகிறார். இவர் நடிக்கும் பாக்கியலெட்சுமி தொடர் தமிழக மக்களிடம் இவருக்கு அதிக பெயர் புகழை தந்துள்ளது. அதுபோல, இளைஞர்கள் மத்தியில் இவர் பிரபலமாக காரணம் வேலைன்னா வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் இவர் நடித்த புஷ்பா கதாபாத்திரம் தான்.
இந்நிலையில், அண்மையில் இவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ரேஷ்மாவின் திரையுலக வாழ்க்கை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது அவருக்கு அதிக பிரபலத்தை தந்த புஷ்பா கேரக்டர் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ரேஷ்மா, 'புஷ்பா கேரக்டரில் முதலில் நடிக்க மாட்டேன் என்று மறுத்தேன். ஆனால், இயக்குநர் கிளாமர் சீன் எதுவுமில்லை பண்ணிகொடுங்க என்று சொன்னார். அதனால் தான் நடித்தேன். ஆனால், இந்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஹீரோயின் ஆகிவிடுவோம் என்று நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை' என்று கூறியுள்ளார்.