‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
சின்னத்திரை பிரபலமான மணிமேகலை வீடு மேல் வீடு, ஒன்றுக்கு இரண்டு கார்கள் என மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். ஹூசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட மணிமேகலையை அன்று உற்றார் உறவினரும் சரி, ரசிகர்களும் சரி கடிந்து தான் பேசினார்கள். இவர்கள் திருமணம் நடந்து சில ஆண்டுகளில் ஹூசைன் மணிமேகலை இருவருமே மிகவும் கஷ்டப்பட்டார்கள். ஆனால், தற்போது சொந்த ஊரில் பண்ணை வீடு, சென்னையில் அப்பார்ட்மெண்ட் வீடுகள், இரண்டு சொகுசு கார்கள் மற்றும் விலையுயர்ந்த பைக் என சாதித்து காட்டியுள்ளனர்.
இந்நிலையில், மணிமேகலை தனது சமீபத்திய பேட்டி ஒன்றில், 'நாங்கள் முதலில் ஐ-20 கார் வைத்திருந்தோம். அதற்கு மூன்று மாதங்கள் தவணை கட்டவில்லை என்று காரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். அப்போது நாங்கள் முடிவெடுத்தோம். அடுத்த நான்கு வருடத்திற்குள் பிம்டபிள்யூ கார் வாங்க வேண்டும் என்று. ஆனால், இரண்டரை வருடத்திலேயே அது நடந்துவிட்டது. அதேபோல் சென்னையில் வாடகை வீட்டிலும் பிரச்னை வந்தது. இப்போது வீடு வாங்கிவிட்டோம். இந்த கஷ்டமான நேரத்தில் என்னுடன் இருந்து எனக்கு ஆறுதல் தந்தது ஹுசைன் தான். அவரது ஆதரவினால் தான் நான் இன்றும் மீடியாவில் நிலைத்து நிற்கிறேன்' என மணிமேகலை அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.