பத்ம பூஷன் விருது பெற்றார் அஜித் | மூன்றாவது முறையாக சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் நயன்தாரா? | மூன்றாவது தெலுங்குப் படத்தை முடித்த 'திருடன் போலீஸ்' இயக்குனர் | விஜய் சேதுபதி படத்தில் கன்னட நடிகர் துனியா விஜய் | பத்மபூஷன் விருது நாளில், விஜய் ரசிகர்கள் மீது அஜித் ரசிகர்கள் கோபம் | சர்வானந்த் ஜோடியாக இரண்டு இளம் நாயகிகள் | சமந்தா தயாரித்த சுபம் படம் மே 9ல் ரிலீஸ் | சர்ச்சையான பஹல்காம் தாக்குதல் அறிக்கை : விளக்கம் கொடுத்த விஜய் ஆண்டனி | ''எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் லாலேட்டா'' ; வெளிப்படையாகவே கோரிக்கை வைத்த '2018' பட இயக்குனர் | சிம்புவுக்கு ஜோடியாகும் கயாடு லோகர் |
கராத்தே மாஸ்டரும், நடிகருமான சிஹான் உசேனி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், சினிமாவிலும் நடித்திருக்கிறார். மிகவும் பாசிட்டிவான நபரான இவரை தமிழ்நாட்டில் பலருக்கும் பிடிக்கும். தற்காப்பு கலை பயில விரும்பும் மாணவர்களுக்கு பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். உசேனி தற்போது ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில், அவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், ‛‛தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் டாப் நட்சத்திரங்களாகவும், இன்றைய அரசியல் ஆளுமைகளாகவும் வலம் வரும் பவன் கல்யாண் மற்றும் விஜய்யிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில், 'மாணவர்களுக்காக நான் கட்டி வைத்திருக்கும் இந்த கலை மாளிகையை விற்று அந்த பணத்தை 8 ஆண்டுகளுக்கு மேல் என்னிடம் பயிற்சி பெறும் மாணவர்கள் ஒலிம்பிக்கில் மெடல் வாங்க பயன்படுத்த வேண்டும்.
தெலுங்கு நடிகர் மற்றும் இன்றைய துணை முதல்வரான பவன் கல்யாண் என்னுடய மாணவர் தான். ஒன்றரை வருடம் என்னிடம் பயிற்சி எடுத்துக் கொண்டார். அவர் பெயர் கல்யாண் குமார். அவருக்கு பவன் என்று பெயர் வைத்ததே நான் தான். இன்று துணை முதல்வராக இருக்கும் பவன் கல்யாண் என்னுடைய கலை மாளிகையை முடிந்தால் அவரே 11 கோடிக்கு வாங்கி கலைக்கோயிலாக மாற்ற வேண்டும்.
அதுபோல் நடிகர் விஜய்க்கும் நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். அவர் தமிழ்நாடு முழுவதும் வீட்டுக்கொரு வில்வித்தை வீரர், வீராங்கனையை உருவாக்க வேண்டும்' என்று அந்த பேட்டியின் வாயிலாக தனது ஆசையை கூறியிருக்கிறார்.
சினிமாவில் கிடைத்த பிரபலத்தை தாண்டி, இன்று அரசியல் களமாடி வரும் இந்த இரண்டு டாப் ஸ்டார்களும், தங்களது முன்னாள் ஆசிரியரின் வேண்டுகோளை ஏற்றுக் கொள்வார்களா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.