ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு : அக்., 30ல் தீர்ப்பு | பிளாஷ்பேக் : தாணுவுக்காக கவுரவ தோற்றத்தில் தோன்றிய ரஜினி | ரஜினி, கமல் மாதிரி தனுஷ், சிம்பு இணைகிறார்களா? | தமிழ் படங்களை புறக்கணிக்கிறாரா? சாய்பல்லவிக்கு என்னாச்சு? | யுவன் சங்கர் ராஜா இசை சுற்றுப்பயணம் | 'அங்காடி தெரு' மகேஷ் நடிக்கும் 'தடை அதை உடை' | ரஜினிகாந்த் மனசு மற்ற ஹீரோக்களுக்கு இல்லையே! | ஸ்வேதா மேனன் மீது நடவடிக்கை எடுக்க தடை நீடிப்பு | நடிகர் சங்க புதுக்கட்டடம்: விஜயகாந்த் பெயர் வைக்க சிக்கலா? | மருதத்தில் ஏமாற்றப்படும் விவசாயிகளின் கதை: விதார்த் |
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி பெரும் வசூலைக் குவித்த படம் 'புஷ்பா 2'. அப்படத்தின் பிரிமியர் காட்சி ஐதராபாத்தில் நடந்தபோது அதில் அல்லு அர்ஜுன் கலந்து கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரேவதி என்ற 39 வயது பெண் ஒருவர் இறந்து போனார். அவரது மகன் 9 வயதான ஸ்ரீதேஜ் நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தான். அவனை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.
கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக செகந்தரபாத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளான். அவன் உயிர் பிழைத்துக் கொண்ட போதும், அவனுக்கு முழுமையான நினைவு இன்னும் திரும்பாமல் உள்ளது. யாரையும் அடையாளம் காணும் நிலையில் அவன் இல்லையாம். உணவும் வயிற்றுப் பகுதிக்கு நேரடியாக அனுப்பப்படுகிறதாம்.
இந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். அதன்பின் தெலங்கானா மாநிலத்தில் அனைத்து விதமான சிறப்புக் காட்சிகளுக்கும் அரசு தடை விதித்தது. பின்னர் அல்லு அர்ஜுனும் அந்த சிறுவனை மருத்துவமனைக்குச் சென்று நேரில் நலம் விசாரித்து வந்தார்.
அந்தக் குடும்பத்திற்கு அல்லு அர்ஜுன் ஒரு கோடி ரூபாயும், தயாரிப்பு நிறுவனமான மைத்ரிமூவி மேக்கர்ஸ் 50 லட்ச ரூபாயும், இயக்குனர் சுகுமார் 50 லட்ச ரூபாயும் நிதியுதவி செய்துள்ளனர்.