ஸ்லிம்மாக இருக்க ஊசியா : தமன்னா பதில் | நலமாக இருக்கிறேன் : மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கோவிந்தா | நலமுடன் வீடு திரும்பினார் தர்மேந்திரா | 'கும்கி- 2' படத்திற்கு இடைக்கால தடை போட்ட சென்னை உயர்நீதிமன்றம்! | 'டியூட்' படத்தை அடுத்து ஓடிடிக்கு வரும் 'பைசன்' | ரஜினியின் 'ஜெயிலர்- 2' படத்தில் இணைந்த மேக்னா ராஜ்! | அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் நடிக்கும் ‛மை டியர் சிஸ்டர்' | விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‛ஜெய்பீம்' நடிகை | பாடல் வரிகள், டியூன் தானாக வந்தது, எல்லாம் அவன் செயல் : சத்ய சாய்பாபா பாடல் குறித்து தேவா நெகிழ்ச்சி | ஏ.ஆர் ரஹ்மானுடன் ஜானி மாஸ்டர் புகைப்படம் : சர்ச்சை கேள்விகளுக்கு சின்மயி பதிலடி |

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி பெரும் வசூலைக் குவித்த படம் 'புஷ்பா 2'. அப்படத்தின் பிரிமியர் காட்சி ஐதராபாத்தில் நடந்தபோது அதில் அல்லு அர்ஜுன் கலந்து கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரேவதி என்ற 39 வயது பெண் ஒருவர் இறந்து போனார். அவரது மகன் 9 வயதான ஸ்ரீதேஜ் நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தான். அவனை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.
கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக செகந்தரபாத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளான். அவன் உயிர் பிழைத்துக் கொண்ட போதும், அவனுக்கு முழுமையான நினைவு இன்னும் திரும்பாமல் உள்ளது. யாரையும் அடையாளம் காணும் நிலையில் அவன் இல்லையாம். உணவும் வயிற்றுப் பகுதிக்கு நேரடியாக அனுப்பப்படுகிறதாம்.
இந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். அதன்பின் தெலங்கானா மாநிலத்தில் அனைத்து விதமான சிறப்புக் காட்சிகளுக்கும் அரசு தடை விதித்தது. பின்னர் அல்லு அர்ஜுனும் அந்த சிறுவனை மருத்துவமனைக்குச் சென்று நேரில் நலம் விசாரித்து வந்தார்.
அந்தக் குடும்பத்திற்கு அல்லு அர்ஜுன் ஒரு கோடி ரூபாயும், தயாரிப்பு நிறுவனமான மைத்ரிமூவி மேக்கர்ஸ் 50 லட்ச ரூபாயும், இயக்குனர் சுகுமார் 50 லட்ச ரூபாயும் நிதியுதவி செய்துள்ளனர்.