சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

பிரபல நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி இன்று சினிமா, சீரியல், வெப் சீரிஸ் என அனைத்திலும் கலக்கி வருகிறார். இவர் நடிக்கும் பாக்கியலெட்சுமி தொடர் தமிழக மக்களிடம் இவருக்கு அதிக பெயர் புகழை தந்துள்ளது. அதுபோல, இளைஞர்கள் மத்தியில் இவர் பிரபலமாக காரணம் வேலைன்னா வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் இவர் நடித்த புஷ்பா கதாபாத்திரம் தான்.
இந்நிலையில், அண்மையில் இவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ரேஷ்மாவின் திரையுலக வாழ்க்கை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது அவருக்கு அதிக பிரபலத்தை தந்த புஷ்பா கேரக்டர் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ரேஷ்மா, 'புஷ்பா கேரக்டரில் முதலில் நடிக்க மாட்டேன் என்று மறுத்தேன். ஆனால், இயக்குநர் கிளாமர் சீன் எதுவுமில்லை பண்ணிகொடுங்க என்று சொன்னார். அதனால் தான் நடித்தேன். ஆனால், இந்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஹீரோயின் ஆகிவிடுவோம் என்று நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை' என்று கூறியுள்ளார்.




