60வது வயதில் புது காதலியை அறிமுகம் செய்த அமீர்கான் | இப்படி செய்தால் வாய்ப்பு கிடைக்குமா? : சிவாங்கி நெத்தியடி பதில் | கார் தவணை கூட கட்டமுடியாத கஷ்டம்! ஆனால் இப்போது? | ஜி.வி. பிரகாஷ்க்கு அதிர்ச்சி தோல்வியை கொடுத்த 25வது படம் 'கிங்ஸ்டன்' | திருப்பதி கோவிலில் சிறப்பு தரிசனம்: நடிகை ரூபினியிடம் ஒன்றரை லட்சம் மோசடி! | கூலி படப்பிடிப்பில் 39வது பிறந்தநாளை கொண்டாடிய லோகேஷ் கனகராஜ்! | 55வது படத்தில் பயோபிக் கதையில் நடிக்கும் தனுஷ்! | பிரதீப் ரங்கநாதன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியன்கர்! | அஜித்தின் 'குட் பேட் அக்லி', சூர்யாவின் 'ரெட்ரோ' இரண்டு படங்களும் ஒரே மாதிரி கதையா? | வெங்கட் பிரபுவிடம் அவகாசம் கேட்ட அக்ஷய் குமார் |
பிரபல நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி இன்று சினிமா, சீரியல், வெப் சீரிஸ் என அனைத்திலும் கலக்கி வருகிறார். இவர் நடிக்கும் பாக்கியலெட்சுமி தொடர் தமிழக மக்களிடம் இவருக்கு அதிக பெயர் புகழை தந்துள்ளது. அதுபோல, இளைஞர்கள் மத்தியில் இவர் பிரபலமாக காரணம் வேலைன்னா வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் இவர் நடித்த புஷ்பா கதாபாத்திரம் தான்.
இந்நிலையில், அண்மையில் இவர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ரேஷ்மாவின் திரையுலக வாழ்க்கை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது அவருக்கு அதிக பிரபலத்தை தந்த புஷ்பா கேரக்டர் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ரேஷ்மா, 'புஷ்பா கேரக்டரில் முதலில் நடிக்க மாட்டேன் என்று மறுத்தேன். ஆனால், இயக்குநர் கிளாமர் சீன் எதுவுமில்லை பண்ணிகொடுங்க என்று சொன்னார். அதனால் தான் நடித்தேன். ஆனால், இந்த அளவுக்கு ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஹீரோயின் ஆகிவிடுவோம் என்று நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை' என்று கூறியுள்ளார்.