புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் வேறெந்த தொடராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாத சாதனை ராமாணயம் தொடர்ந்து படைத்து வருகிறது. ராமானந்த் சாகர் தயாரிப்பில் உருவான இந்த தொடர், 1987ம் ஆண்டில் தூர்தர்ஷனில் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரந்தோறும் ஒளிபரப்பானது.
ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் இந்த தொடரை பார்ப்பதற்காக மக்கள் வாரம் முழுக்க காத்து கிடந்ததும், கிராமங்களில் மரத்தடியில், பஞ்சாயத்து ஆபீசில் வைக்கப்பட்டிருந்த சின்னஞ்சிறு தொலைக்காட்சி பெட்டியில் நூற்றுக்கணக்கான மக்களும் இமை கொட்டாமல் பார்த்தது வரலாறு.
கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு மக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தபோது தூர்தர்ஷன் ராமாணயத்தை 33 ஆண்டுகளுக்கு பிறகு மறு ஒளிபரப்பு செய்தது. அப்போதும் கோடிக் கணக்கான மக்கள் கண்டு ரசித்தார்கள். இப்போது உலகிலேயே அதிக மக்களால் பார்க்கப்பட்ட முதல் தொடர் என்ற சாதனையை ராமாயணம் படைத்துள்ளது. இதனை தூர்தர்ஷன் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருக்கிறது.
இந்நிலையில் இத்தொடர் கலர்ஸ் இந்தி தொலைகாட்சியில் நேற்று முன்தினம் (மே 06) முதல் மீண்டும் ஒளிபரப்பாகிறது. விரைவில் மொழிமாற்றம் செய்யப்பட்டு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகும் என்கிறார்கள்.