என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்ஷரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் | பிளாஷ்பேக்: மூன்று திரைப்படங்களில் மட்டுமே நடித்து, முதன்மை குழந்தை நட்சத்திரம் என்ற உச்சம் தொட்ட “பேபி சரோஜா” | பிரதீப்பின் ‛எல்ஐகே' தள்ளிவைப்பு : 'டியூட்' தயாரிப்பாளர் மீது 'எல்ஐகே' தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | சிம்பு படத்தலைப்பு 'அரசன்': ஹீரோயினாக நடிப்பது சமந்தா? | மீ டு குற்றச்சாட்டுக்கு ஆளான இயக்குனர் டைரக்சனில் நடிப்பது ஏன் ? ; ரீமா கல்லிங்கல் விளக்கம் | காந்தாரா 1000 கோடி வசூலிக்கும் ; நடிகர் ஜெயராம் ஆருடம் |
இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் வேறெந்த தொடராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாத சாதனை ராமாணயம் தொடர்ந்து படைத்து வருகிறது. ராமானந்த் சாகர் தயாரிப்பில் உருவான இந்த தொடர், 1987ம் ஆண்டில் தூர்தர்ஷனில் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரந்தோறும் ஒளிபரப்பானது.
ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் இந்த தொடரை பார்ப்பதற்காக மக்கள் வாரம் முழுக்க காத்து கிடந்ததும், கிராமங்களில் மரத்தடியில், பஞ்சாயத்து ஆபீசில் வைக்கப்பட்டிருந்த சின்னஞ்சிறு தொலைக்காட்சி பெட்டியில் நூற்றுக்கணக்கான மக்களும் இமை கொட்டாமல் பார்த்தது வரலாறு.
கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு மக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தபோது தூர்தர்ஷன் ராமாணயத்தை 33 ஆண்டுகளுக்கு பிறகு மறு ஒளிபரப்பு செய்தது. அப்போதும் கோடிக் கணக்கான மக்கள் கண்டு ரசித்தார்கள். இப்போது உலகிலேயே அதிக மக்களால் பார்க்கப்பட்ட முதல் தொடர் என்ற சாதனையை ராமாயணம் படைத்துள்ளது. இதனை தூர்தர்ஷன் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருக்கிறது.
இந்நிலையில் இத்தொடர் கலர்ஸ் இந்தி தொலைகாட்சியில் நேற்று முன்தினம் (மே 06) முதல் மீண்டும் ஒளிபரப்பாகிறது. விரைவில் மொழிமாற்றம் செய்யப்பட்டு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகும் என்கிறார்கள்.