கோலிவுட்டில் கணிசமாக குறைந்த பார்ட்டிகள்: ஸ்ரீகாந்த், அமீர், கிருஷ்ணா எதிர்காலம்? | சிவகார்த்திகேயன் வெளியிடும் ஹவுஸ்மேட்ஸ்: பேய் படமா? வேறுவகை ஜானரா? | மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் |
இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் வேறெந்த தொடராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாத சாதனை ராமாணயம் தொடர்ந்து படைத்து வருகிறது. ராமானந்த் சாகர் தயாரிப்பில் உருவான இந்த தொடர், 1987ம் ஆண்டில் தூர்தர்ஷனில் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரந்தோறும் ஒளிபரப்பானது.
ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் இந்த தொடரை பார்ப்பதற்காக மக்கள் வாரம் முழுக்க காத்து கிடந்ததும், கிராமங்களில் மரத்தடியில், பஞ்சாயத்து ஆபீசில் வைக்கப்பட்டிருந்த சின்னஞ்சிறு தொலைக்காட்சி பெட்டியில் நூற்றுக்கணக்கான மக்களும் இமை கொட்டாமல் பார்த்தது வரலாறு.
கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு மக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தபோது தூர்தர்ஷன் ராமாணயத்தை 33 ஆண்டுகளுக்கு பிறகு மறு ஒளிபரப்பு செய்தது. அப்போதும் கோடிக் கணக்கான மக்கள் கண்டு ரசித்தார்கள். இப்போது உலகிலேயே அதிக மக்களால் பார்க்கப்பட்ட முதல் தொடர் என்ற சாதனையை ராமாயணம் படைத்துள்ளது. இதனை தூர்தர்ஷன் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருக்கிறது.
இந்நிலையில் இத்தொடர் கலர்ஸ் இந்தி தொலைகாட்சியில் நேற்று முன்தினம் (மே 06) முதல் மீண்டும் ஒளிபரப்பாகிறது. விரைவில் மொழிமாற்றம் செய்யப்பட்டு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகும் என்கிறார்கள்.