கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் | 'கைதி 2' எப்போது ஆரம்பமாகும் ? | நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி |

எல்லா கதைகளிலும், ராமாயணம், மகாபாரதத்தின் தாக்கம் இருக்கும் என்பார்கள். சில படங்கள் நேரடியாகவே இந்த இரண்டையும் தழுவி எடுக்கப்படுகிறது. மணிரத்தினத்தில் பெரும்பாலான படங்கள் இவற்றை தழுவியதாக இருக்கும். பிரபாஸ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் ஆதிபுருஷ் படம் இந்த வரிசையிலான படம் தான்.
தற்போது கன்னடத்தில் ராமாயண கதையை தழுவி லங்கே என்ற படம் தயாராகி உள்ளது. லங்கே என்பது இலங்கையை குறிக்கும் சொல். இதனை ராம் பிரசாத் இயக்கி உள்ளார். யோகேஷ், சஞ்சாரி விஜய், காவ்யா ஷெட்டி, நடிக்கிறார்கள். படம் வருகிற 10ம் தேதி வெளிவருகிறது.
இந்த படம் பற்றி இயக்குனர் ராம்பிரசாத் கூறியதாவது: கர்நாடகாவில் மிக நீண்ட காலத்திற்கு முன்பு நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த படம் உருவாகிறது. இந்த படத்தின் கதையும், இதில் இடம் பெறும் சில சம்பவங்களும் ராமாணயத்தில் இடம்பெற்றவையாக இருந்த ஒற்றுமையை கண்டு வியந்து போனேன்.
ராமன், சீதை, ராவணன், அனுமன் காதாபாத்திரங்களை ஒத்த கேரக்டர்களே இந்த படத்திலும் இடம்பெறுகிறது. அதனால்தான் படத்திற்கும் லங்கே என்று டைட்டில் வைத்திருக்கிறோம். என்றார்.