Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

திருமண ஆசை காட்டி மோசடி : சின்னத்திரை நடிகை ரிகானா மீது போலீசில் புகார்

18 ஜூன், 2025 - 08:46 IST
எழுத்தின் அளவு:
Police-complaint-filed-against-small-screen-actress-Regina-for-cheating-on-her-husband-by-pretending-to-be-married

ஆனந்த ராகம், மீனாட்சி பொண்ணுங்க போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ரிஹானா பேகம். விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பொன்னி' சீரியலில் கதாநாயகனின் அம்மாவாக நடித்த இவர், பின்னர் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்த நிலையில் ரிஹானா மீது ராஜ் கண்ணன் என்ற ஓட்டல் அதிபர் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி 20 லட்சம் பண மோசடி செய்ததாக கூறியுள்ளார்.

அவர் தனது புகார் மனுவில் மேலும் கூறியிருப்பதாவது: 'பாண்டியன் ஸ்டோர்' உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள நடிகை ரிகானா பேகம், நண்பர் மூலம் எனக்கு அறிமுகமானார். என்னுடன் நட்பாக பழகிய அவர், தனக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருப்பதாகவும், கணவரை விவாகரத்து செய்துவிட்டதாகவும் கூறினார். எனக்கும் திருமணம் ஆகாததால் ரிகானா பேகத்தை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரது தாய் கூறினார். அதன்பிறகு நாங்கள் இருவரும் காதலித்து வந்தோம். ஒரு கட்டத்தில் நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம். இதனால் அவர் கேட்ட நகை உள்ளிட்ட பொருட்களை எல்லாம் வாங்கி கொடுத்தேன். 20 லட்சம் வரை அவருக்காக செலவு செய்தேன்.

கடந்த ஆண்டு அவரது உறவினர்கள் முன்னிலையில் ரிகானா பேகத்தின் கழுத்தில் நான் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டேன். திருமணத்திற்கு பிறகுதான் அவர் முதல் கணவரை விவாகரத்து செய்யாமல் அவருடன் தொடர்பில் இருப்பதும், திருமண ஆசை காட்டி என்னிடம் நகை, பணத்தை வாங்கி மோசடி செய்ததும் தெரிந்தது. ரிகானா பேகத்தின் மீது நடவடிக்கை எடுத்து எனது நகை, பணத்தை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறி உள்ளார். மனுவை விசாரித்த காவல்துறை போலீசில் ஆஜராகுமாறு ரிஹானாவுக்கு சம்மன் அனுப்பி உள்ளது.

இது தொடர்பாக ரிஹானா வெளியிட்டுள்ள வீடியோவில் "ராஜ்கண்ணன், தனது தொழிலை விரிவுபடுத்துவதாகவும், அதில் கிடைக்கும் லாபத்தில் பங்கு தருவதாகவும் கூறி என்னிடம் இருந்து 18 லட்சம் வாங்கினார். ஆனால் அவர் அதன்பிறகு எந்த பணத்தையும் எனக்கு தரவில்லை. அடிக்கடி ரவுடிபோல் என்னை கத்தியை காட்டி மிரட்டி வந்தார். அவர் தங்க சங்கிலி என்று கூறி எனது கழுத்தில் அணிவித்தார். ஆனால் அது இந்துக்கள் அணியும் தாலி போல் இருந்ததால் கழற்றி வைத்துவிட்டேன். எனக்கும், எனது குடும்பத்துக்கும் ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு காரணம் ராஜ் கண்ணன் தான்" என்று பேசி உள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
குடியிருந்த கோயில், அவ்வை சண்முகி, போர் தொழில் - ஞாயிறு திரைப்படங்கள்குடியிருந்த கோயில், அவ்வை சண்முகி, ... வாரிசு: ஜீ தமிழில் புதிய தொடர் வாரிசு: ஜீ தமிழில் புதிய தொடர்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in