படம்... பாராட்டு... பயம்... மனம் திறந்த ஸ்ரீகணேஷ் | நானும் மக்கள் பிரதிநிதி தான் - மதுவந்தி | விஷால் கோரிக்கையை நிராகரித்த சினிமா அமைப்புகள் | வெற்றிக்காக காத்திருக்கும் அப்பாவும், மகனும் | ஆட்டுக்கார அலமேலு, கல்யாணராமன், சுல்தான் : ஞாயிறு திரைப்படங்கள் | விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் |
விஜய் டிவியில் வெளியான 'பாரதி கண்ணம்மா' என்ற சீரியலில் அஞ்சலி என்ற வேடத்தில் நடித்து பிரபலமானவர் கண்மணி. அதன் பிறகு ஜீ தமிழில் வெளியான அமுதாவும் அன்னலட்சுமியும், விஜய் டிவியில் வெளியான 'மகாநதி' என பல சீரியலில் நடித்த கண்மணி, பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளர் அஸ்வத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு தனது வளைகாப்பு புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட நடிகை கண்மணி, தற்போது கடந்த ஜூன் 8-ம் தேதி தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்த தகவலை புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதோடு, நாங்கள் இருவரும் ஒரு காதல் கதை எழுதினோம். வாழ்க்கை அதன் தொடர்ச்சியாக ஒரு விஷயத்துடன் எங்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. எங்கள் பயணம் ஒரு திருப்பத்துடன் தொடர்கிறது என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார் நடிகை கண்மணி.