ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
காமெடி மற்றும் குக் கலந்த நிகழ்ச்சியான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் இரண்டு தினங்களுக்கு முன்பு நடந்தது. கடைசி சில வாரங்களில் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மணிமேகலை விலகியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்குக் காரணமானவர் 'குக்' ஆகக் கலந்து கொண்ட தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டே தான் என பலரும் பேச ஆரம்பித்தார்கள்.
அனைவரும் எதிர்பார்த்தது போலவே 'விஜய் டிவியின் செல்ல மகள்' என்று அழைக்கப்பட்ட பிரியங்காதான் 'வின்னர்' ஆக தேர்வு செய்யப்பட்டார். அதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
நிகழ்ச்சியிலிருந்து விலகியபின் மணிமேகலை வெளியிட்ட வீடியோக்களுக்கு மில்லியன் கணக்கில் பார்வைகள் கிடைத்தது. அவருக்கான ஆதரவும் அதிகமானது. அதனால் நிகழ்ச்சியின் கோமாளிகள் மூலம் மணிமேகலைக்கு சில பதிலடியை மறைமுகமாகக் கொடுத்தனர். ஆனால், அதெல்லாம் மணிமேகலைக்கான ஆதரவைக் குறைக்கவில்லை.
இதனிடையே, தான் வெற்றி பெற்றது குறித்து உணர்வுபூர்வமான பதிவொன்றை இன்ஸ்டா தளத்தில் வெளியிட்டிருந்தார் பிரியங்கா. அதில் கமெண்ட் பகுதியில் ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் அவரைத் திட்டித் தீர்த்து கமெண்ட் செய்துள்ளனர்.
காமெடியாக கடந்த ஐந்து சீசன்களாக வலம் வந்த நிகழ்ச்சியை கலக நிகழ்ச்சியாக மாற்றிவிட்டார்கள் என அதன் ரசிகர்கள் கரித்துக் கொட்டியுள்ளார்கள்.