ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
பாக்கியலெட்சுமி தொடரில் கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் சதீஷுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதிலும், இரு மனைவிகளிடம் மாட்டிக்கொண்டு படாதபாடு படும் அவரது கேரக்டரை பார்த்து பல ரசிகைகளும் அவருக்கு பெருகி வருகின்றனர். இந்நிலையில், சதீஷின் ரசிகை ஒருவர் அவரிடம் நீண்ட நாட்களாக செல்பி புகைப்படம் கேட்டு டார்ச்சர் செய்துள்ளார். புகைப்படம் எடுக்க முடியாமல் போகவே அடையாரில் உள்ள சதீஷ் வீட்டு முன்பு குங்குமம் தடவிய எலுமிச்சம்பழத்தை வைத்துக்கொண்டு செய்வினை வைத்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் கலக்கம் அடைந்த சதீஷ் தற்போது திருவான்மியூர் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்து புகார் அளித்துள்ளார்.