இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருந்து அரசியல் கட்சி ஆரம்பித்து தோல்விகளை சந்தித்தவர் பவன் கல்யாண். இந்த ஆண்டு நடந்த ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் அவரது ஜனசேனா கட்சி பெரும் வெற்றி பெற்றது. தெலுங்கு தேசம் மற்றும் பாஜக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு பவன் கல்யாணும் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆந்திர மாநில துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
துணை முதல்வராதவற்கு முன்பாக அவர் நடித்து வந்த சில படங்களின் படப்பிடிப்புகள் அப்படியே நின்று போனது. அதில் தற்போது 'ஹரிஹர வீர மல்லு' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். நேற்று படப்பிடிப்பில் கலந்து கொண்ட பின் செல்பி ஒன்றை எடுத்து, “பரபரப்பான அரசியல் வேலைகளுக்கு நடுவே கடைசியாக நீண்ட நாட்களாக காத்திருந்த வேலையில் சில மணி நேரங்கள் தர முடிந்தது, ஹரிஹர வீரமல்லு,” என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நேற்று படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாவதை முன்னிட்டு படத்தின் இயக்குனர் ஜோதி கிருஷ்ணா, தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் ஆகியோர் விஜயவாடாவில் உள்ள ஸ்ரீ கனக துர்கா கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினர்.