கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் |

தென்னிந்திய அளவில் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்ட பிறகும் தொடர்ந்து குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனித்துக் கொண்டு படங்களிலும் நடித்து வருகிறார். அது மட்டுமல்ல பெண்களின் அழகு சாதன பொருட்களுக்காக '9 ஸ்கின்' என்கிற ஒரு சரும பராமரிப்பு நிறுவனத்தையும் துவங்கியுள்ளார். இந்த நிறுவனத்தின் தயாரிப்பாக லேட்டஸ்ட்டாக 'ஸ்கின்ட்ரெல்லா' என்கிற ஒரு புராடக்ட்-ஐ சமீபத்தில் மும்பையில் விழா ஒன்றை நடத்தி அறிமுகப்படுத்தினார் நயன்தாரா.
இந்த நிகழ்வின் போது கீழே நின்ற மூன்று பெண்கள் தன்னுடன் புகைப்படம் எடுக்க விரும்பி அதே சமயம் தயக்கத்துடன் நிற்பதை கவனித்த நயன்தாரா உடனடியாக விழா ஏற்பாட்டாளர் ஒருவரை அழைத்து அவர்கள் மூவரையும் கைகாட்டி மேடைக்கு அழைத்து வரச் சொன்னார். அப்படி வந்த மூன்று பெண்களுடன் சேர்ந்து செல்பியும் எடுத்துக் கொண்டார் நயன்தாரா. இப்படி நயன்தாரா தங்களைக் கவனித்து மேடைக்கு வரவழைத்து புகைப்படம் எடுப்பார் என எதிர்பாராத இந்த மூன்று பெண்களும் மகிழ்ச்சியுடன் நயன்தாராவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து சென்றனர்.