மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ஆர்த்திகா. இவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் சினிமா மற்றும் சின்னத்திரையில் நடக்கும் அட்ஜெஸ்மெண்ட் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ‛‛சினிமாவில் பெரிய இடத்திற்கு வர வேண்டும் என்பதற்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து பிரபலமாகும் வாழ்க்கை எனக்கு தேவை இல்லை. சினிமாவில் பல பெண்கள் பெயருக்காக, பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்கிறார்கள். அவர்களால் தான் மற்ற பெண்களையும் அப்படியே நினைத்து அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்கிறார்கள். அவர்களிடம் தெளிவாக சொல்லிவிட்டாலே போதும். அதேபோல் எனக்கு கவர்ச்சியாக உடை அணிய பிடிக்காது. இதனால் நான் முன்பே எல்லாத்தையும் கூறிவிடுவேன். இதனால் எனக்கு பணம் குறைவாக கிடைத்தாலும் பரவாயில்லை'' என்று கூறியுள்ளார்.