மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சின்னத்திரை தம்பதிகளான பிரஜன் - சாண்ட்ரா தம்பதியினருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் கழித்து இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தனர். தற்போது பிரஜன் மட்டும் ஆக்டிவாக சினிமாக்களில் நடித்து வருகிறார். சாண்ட்ரா பொறுப்பான குடும்ப தலைவியாக குழந்தைகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அண்மையில் இருவரும் ஜோடியாக பேட்டி அளித்துள்ளனர்.
அதில், 'நாங்கள் காதலிக்கும் போது எங்களுக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் தான் அரிசி மூட்டை எடுத்து தந்தார். குழந்தைகள் பிறந்த பின் மிகவும் கஷ்டப்பட்டு வளர்த்தோம். யாருமே உதவி செய்யவில்லை. பிரஜன் இரவு முழுவதும் தூங்காமல் குழந்தையை பார்த்துக் கொள்வார். எங்கள் இருவருக்குமிடையே நல்ல புரிதல் இருந்ததால் தான் எங்களுடைய கஷ்டமான காலத்தை கடந்து வந்தோம்' என கூறியுள்ளனர்.