மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தனக்கு நடிக்க வாய்ப்பு அதிகம் இருக்கும் படங்களாக தேர்ந்தெடுத்து தன்னை எப்போதுமே ரசிகர்களின் கவனத்தில் நிறுத்திக் கொள்பவர் நடிகை ரெஜினா கசான்ட்ரா. இன்று அனைத்து முன்னணி ஹீரோக்களுமே நடிக்க ஆசைப்படுகின்ற இயக்குனர் லோகேஷ் கனகராஜின் முதல் படமான 'மாநகரம்' படத்தின் கதாநாயகி. ஹீரோயின் ஆக மட்டுமல்லாமல் 'சக்ரா' போன்ற படங்களில் வில்லியாகவும் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.
ஒரு பக்கம் தற்போது 'விடாமுயற்சி'யில் அஜித்துடன் இணைந்து நடித்து வரும் ரெஜினா இன்னொரு பக்கம் ஹிந்தியிலும் 'ஜாட்' மற்றும் 'செக்சன் 108' ஆகிய படங்களில் நடிக்க வருகிறார். ஆனால் ஹிந்தியில் பட வாய்ப்புகளை பெறுவது என்பது அவ்வளவு சுலபம் அல்ல என்றும் அங்கே கதாநாயகிகளை தேர்வு செய்யும் நடைமுறை குறித்தும் சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்து கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “ஹிந்தியில் பெரும்பாலும் படப்பிடிப்பிலேயே லைவ் ஆக வசனங்களை பதிவு செய்வதால் ஹிந்தி நன்கு பேச தெரிந்தவர்களை மட்டுமே தேர்வு செய்கின்றனர். நல்ல வேலையாக என்னுடைய அம்மா ஹிந்தி ஸ்கூலுக்கு அனுப்பி என்னை படிக்க வைத்தார். அதே சமயம் தென்னிந்திய படங்களில் மொழி ஒரு பிரச்னையே இல்லை. எந்த மொழியை சேர்ந்தவர் என்றாலும் நடிக்க வைத்து விட்டு டப்பிங்கில் சரி செய்து கொள்கிறார்கள்.
அதே சமயம் ஹிந்தியில் கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள லைம் லைட்டிலேயே இருக்க வேண்டும் என்றால் ஒரு தனியார் புரமோட்டிங் ஏஜென்சி மூலமாக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பது எனக்கு தாமதமாகத் தான் தெரிந்தது. ஆனால் வாய்ப்பை பெற வேண்டும் என்பதற்காக என்னையே விற்றுக்கொள்ளும் ஆள் நான் அல்ல” என்று கூறியுள்ளார்.