அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
நடிகர் துல்கர் சல்மான் மலையாள திரையுலகை தாண்டி தமிழில் அறிமுகமாகி பின்னர் அப்படியே படிப்படியாக தெலுங்கு, ஹிந்தி திரையுலகம் வரை சென்று விட்டார். குறிப்பாக தமிழை விட தெலுங்கு திரையுலக படைப்பாளிகளும் ரசிகர்களும் துல்கர் சல்மானுக்கு நல்ல வரவேற்பு கொடுத்து அவரை ஆராதித்து வருகின்றனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் அவர் நடித்த 'சீதாராமம்' படம் அவரை தெலுங்கு ரசிகர்களிடம் இன்னும் நெருக்கமாக்கியது. அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் வெங்கி அட்லூரி டைரக்ஷனில் துல்கர் சல்மான் நடித்த 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் கடந்த தீபாவளிக்கு வெளியாகி மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது. நான்கே நாட்களில் 55 கோடி வசூலித்து தற்போது அடுத்த இலக்கை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.
இந்த படத்தின் சக்ஸஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது. துல்கர் சல்மானை தெலுங்கில் முதன் முதலாக 'மகாநடி' படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவரும் சமீபத்தில் வெளியான 'கல்கி' படத்தின் இயக்குனருமான நாக் அஸ்வினும் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் அவர் பேசும்போது, “நான் சென்னையில் இருந்த துல்கர் சல்மானிடம் 'மகாநடி' படத்தின் கதையை சொல்வதற்காக சென்றேன். ஆனால் அவர் கதையை கேட்கும் முன்பாகவே இந்த படத்தில் நடிக்க முடியாது என கூறிவிட்டார். காரணம் எனக்கு தெலுங்கு பேச வராது.. அதனால் தெலுங்கு படங்களில் நடிக்க முடியாது.. படம் பார்க்கும் ரசிகர்கள் என்னை கூர்மையாக கவனிப்பார்கள். இவனுக்கு தெலுங்கு பேசவே தெரியவில்லையே என்று சொல்லி விட மாட்டார்களா, என்று கூறினார்.
ஆனால் அவரை கன்வின்ஸ் செய்து அந்த படத்தில் நடிக்க வைத்தேன். இன்று ஆறு வருடங்களுக்குப் பிறகு, மூன்று பிளாக் பஸ்டர்கள் சேர்ந்த ஒரு ஹாட்ரிக் வெற்றிக்குப் பிறகு இதோ தெலுங்கு ரசிகர்களின் மனம் கவர்ந்தவராக ஒரு தெலுங்கு சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு அவர் உயர்ந்துள்ளார். இதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருக்கு நன்றி” என்று துல்கர் சல்மானை மேடையில் வைத்துக் கொண்டே இந்த புதிய தகவலை வெளியிட்டார் இயக்குனர் நாக் அஸ்வின்.