அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கோபிநாத்துக்கு அண்மையில் பாராட்டு விழா நடத்தியுள்ளனர். அந்த விழாவில் சற்றும் எதிர்பாராத வகையில் பாரா ஒலிம்பிக் விளையாட்டில் விளையாடிய மாற்றுத்திறனாளி வீரர்கள் கலந்து கொண்டனர். அவர்கள், தாங்கள் பாரா ஒலிம்பிக்கில் விளையாட காரணமாகவும் அதற்காக பல உதவிகளையும் செய்தவர் கோபிநாத் தான் என்று நெகிழ்ச்சியாக பேசியதோடு பாரா ஒலிம்பிக்கில் வாங்கிய மெடல்களை கோபிநாத் கையால் அணிவிக்க சொல்லி கவுரவப்படுத்தியுள்ளனர்.
இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது. அத்துடன் கபடி வீராங்கனை ஒருவர் தனது கல்லூரி படிப்பிற்காக உதவிகேட்டபோது அவருடன் சேர்ந்த 11 பெண்கள் படிப்பதற்கும் கோபிநாத் உதவி செய்துள்ள தகவலும் தற்போது இணையதளத்தில் பரவி வருகிறது. இதனையடுத்து பலரும் கோபிநாத்தை புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.