ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கோபிநாத்துக்கு அண்மையில் பாராட்டு விழா நடத்தியுள்ளனர். அந்த விழாவில் சற்றும் எதிர்பாராத வகையில் பாரா ஒலிம்பிக் விளையாட்டில் விளையாடிய மாற்றுத்திறனாளி வீரர்கள் கலந்து கொண்டனர். அவர்கள், தாங்கள் பாரா ஒலிம்பிக்கில் விளையாட காரணமாகவும் அதற்காக பல உதவிகளையும் செய்தவர் கோபிநாத் தான் என்று நெகிழ்ச்சியாக பேசியதோடு பாரா ஒலிம்பிக்கில் வாங்கிய மெடல்களை கோபிநாத் கையால் அணிவிக்க சொல்லி கவுரவப்படுத்தியுள்ளனர்.
இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது. அத்துடன் கபடி வீராங்கனை ஒருவர் தனது கல்லூரி படிப்பிற்காக உதவிகேட்டபோது அவருடன் சேர்ந்த 11 பெண்கள் படிப்பதற்கும் கோபிநாத் உதவி செய்துள்ள தகவலும் தற்போது இணையதளத்தில் பரவி வருகிறது. இதனையடுத்து பலரும் கோபிநாத்தை புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.