'அவதார் - பயர் அண்ட் ஆஷ்' டிரைலர் ரிலீஸ் | ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை |
பிரபல சின்னத்திரை நடிகரான ஸ்ரீகுமார் 'வானத்தைப்போல' தொடரில் நடித்து வருகிறார். அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் ஆரம்பகாலக்கட்டத்தில் அலட்சியத்தால் தான் பல சினிமா வாய்ப்புகளை இழந்ததாக கூறியுள்ளார்.
அந்த பேட்டியில் ‛பெரியண்ணா படத்தில் முதலில் நடிக்க விஜயகாந்த் என்னை தான் செலக்ட் செய்திருந்தார். ஆனால், அப்போது விஜய், சூர்யாவை சிபாரிசு செய்தார். ஆரம்ப காலக்கட்டத்தில் நானும் சூர்யாவும் ஒரே டான்ஸ் க்ளாஸில் ஆடியிருக்கிறோம். சூர்யாவுக்கு நிறையவே திறமைகள் இருந்தது. எனவே, இறுதியில் அவருக்கு அந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. என் அப்பா என்னிடம் டான்ஸ் கத்துக்கோ, பைட் கத்துக்கோ என்று அடிக்கடி சொல்வார். ஆனால், அப்போதெல்லாம் நான் அசால்ட்டாக இருந்துவிட்டேன். அதனாலேயே பல வாய்ப்புகளை நான் இழந்துவிட்டேன்' என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.