விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு |
பிரபல சின்னத்திரை நடிகரான ஸ்ரீகுமார் 'வானத்தைப்போல' தொடரில் நடித்து வருகிறார். அவர் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் ஆரம்பகாலக்கட்டத்தில் அலட்சியத்தால் தான் பல சினிமா வாய்ப்புகளை இழந்ததாக கூறியுள்ளார்.
அந்த பேட்டியில் ‛பெரியண்ணா படத்தில் முதலில் நடிக்க விஜயகாந்த் என்னை தான் செலக்ட் செய்திருந்தார். ஆனால், அப்போது விஜய், சூர்யாவை சிபாரிசு செய்தார். ஆரம்ப காலக்கட்டத்தில் நானும் சூர்யாவும் ஒரே டான்ஸ் க்ளாஸில் ஆடியிருக்கிறோம். சூர்யாவுக்கு நிறையவே திறமைகள் இருந்தது. எனவே, இறுதியில் அவருக்கு அந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. என் அப்பா என்னிடம் டான்ஸ் கத்துக்கோ, பைட் கத்துக்கோ என்று அடிக்கடி சொல்வார். ஆனால், அப்போதெல்லாம் நான் அசால்ட்டாக இருந்துவிட்டேன். அதனாலேயே பல வாய்ப்புகளை நான் இழந்துவிட்டேன்' என்று அந்த பேட்டியில் கூறியுள்ளார்.