இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலில், முதன்மை கதாபாத்திரமான மீனாட்சி கதாபாத்திரத்தில் நடிகை அர்ச்சனா நடித்து வந்தார். சில தினங்களுக்கு முன் கதையின் போக்கு தனக்கு பிடிக்காத காரணத்தால் மீனாட்சி பொண்ணுங்க சீரியலிலிருந்து தான் விலகிக்கொள்வதாக அறிவித்தார். இதனையடுத்து யார் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடிக்க போகிறார் என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்தது. ஆனால், மீனாட்சி தீ விபத்தில் இறந்துவிட்டது போல அவரது அஸ்தியை காண்பித்து அந்த கதாபாத்திரத்தை எண்ட் கார்டு போட்டு முடித்திருந்தனர். இதனால் மீனாட்சி கதாபாத்திரத்திற்கே எண்ட் கார்டா? என ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர்.
இந்நிலையில், அர்ச்சனாவுக்கு மாற்றாக மற்றொரு நடிகையை கண்டுபிடித்துவிட்ட சீரியல் குழு மீனாட்சி கதாபாத்திரத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்துள்ளது. இனி வரும் எபிசோடுகளில் நடிகை ஸ்ரீ ரஞ்சனி தான் மீனாட்சி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான ப்ரோமோ அண்மையில் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் புதிய மீனாட்சியை ஆர்வமாக எதிர்பார்த்து வருகின்றனர்.