சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' | குழந்தைகளின் உளவியலை பேசும் 'நாங்கள்' | சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் பவன் கல்யாண் மகன் தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி | பிளாஷ்பேக்: கடைசி வரை ஹீரோயின் ஆக முடியாத பிருந்தா பரேக் | பிளாஷ்பேக்: வண்ணத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட சக்ர தாரி | 'தனுஷ் 55' படத்தின் கதை பற்றி அப்டேட் தந்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி | அசத்துமா 'அஅ - அ' கூட்டணி? வெளியானது அறிவிப்பு | தமிழில் மற்ற மொழி நிறுவனங்களின் ஆதிக்கம் | வீட்டில் அமைதியாக பிறந்தநாளைக் கொண்டாடிய அல்லு அர்ஜுன் |
வெளியில் தைரியமாக இருப்பது போல் தோற்றமளிக்கும் பலரும் தங்களுக்குள் ஏதோ ஒரு விஷயத்திற்காக பயந்து கொண்டு தான் இருப்பார்கள். அந்த வகையில், சர்ச்சை நாயகி வனிதா, தன் வாழ்வில் நடக்கும் பிரச்னைகளை தைரியமாக எதிர்கொள்வதும் பேசுவதும் என தைரியமான பெண்ணுக்கு உதாரணமாக இருந்து வருகிறார். ஆனால், அவருக்குள்ளும் பயம் இருக்கிறது. மிகச்சிறிய அறை, லிப்ட், இருட்டான குகை, திருவிழாக்கூட்டம், ட்ரெயின் போன்ற இடங்களில் இருக்கும் போது நாம் செத்துவிடுவோமோ என்ற பயம் சிலருக்கு உண்டாகும்.
அந்த நோய்க்கு பெயர் தான் ‛க்ளாஸ்ட்ரோபோபியா'. அண்மையில் அளித்த பேட்டியில் தனக்கும் க்ளாஸ்ட்ரோபோபியா இருப்பதாக வனிதா கூறியுள்ளார். லிப்ட், கழிவறை போன்ற சிறிய இடங்களில் தன்னால் நீண்ட நேரம் இருக்க முடியாது என்றும், தனக்கு மிகவும் நெருக்கமான சிலருக்கு மட்டுமே இந்த நோய் எனக்கிருப்பது தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.