மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
வெளியில் தைரியமாக இருப்பது போல் தோற்றமளிக்கும் பலரும் தங்களுக்குள் ஏதோ ஒரு விஷயத்திற்காக பயந்து கொண்டு தான் இருப்பார்கள். அந்த வகையில், சர்ச்சை நாயகி வனிதா, தன் வாழ்வில் நடக்கும் பிரச்னைகளை தைரியமாக எதிர்கொள்வதும் பேசுவதும் என தைரியமான பெண்ணுக்கு உதாரணமாக இருந்து வருகிறார். ஆனால், அவருக்குள்ளும் பயம் இருக்கிறது. மிகச்சிறிய அறை, லிப்ட், இருட்டான குகை, திருவிழாக்கூட்டம், ட்ரெயின் போன்ற இடங்களில் இருக்கும் போது நாம் செத்துவிடுவோமோ என்ற பயம் சிலருக்கு உண்டாகும்.
அந்த நோய்க்கு பெயர் தான் ‛க்ளாஸ்ட்ரோபோபியா'. அண்மையில் அளித்த பேட்டியில் தனக்கும் க்ளாஸ்ட்ரோபோபியா இருப்பதாக வனிதா கூறியுள்ளார். லிப்ட், கழிவறை போன்ற சிறிய இடங்களில் தன்னால் நீண்ட நேரம் இருக்க முடியாது என்றும், தனக்கு மிகவும் நெருக்கமான சிலருக்கு மட்டுமே இந்த நோய் எனக்கிருப்பது தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.