''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
சின்னத்திரை நடிகர் சதீஷ் விஜய் டிவியின் பாக்கியலெட்சுமி தொடரில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். ஹீரோ, வில்லன், காமெடி என ஒட்டுமொத்த உருவமாக கோபி ரோல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதில் கச்சிதமாக பெர்பார்மன்ஸ் செய்து வரும் சதீஷுக்கு ரசிகர் பட்டாளமும் அதிகரித்துள்ளது. சில தினங்களுக்கு முன் சதீஷ், பாக்கியலெட்சுமி சீரியலை விட்டு விலகுவதாக திடீரென அறிவித்தார். அதை உறுதிப்படுத்தும் வகையில் மீண்டும் வீடியோ வெளியிட்டிருந்தார். இதனால் வருத்தமடைந்த ரசிகர்கள் சதீஷை மீண்டும் கோபி கதாபாத்திரத்தில் தொடரும்படி வேண்டுகோள் வைத்து வந்தனர்.
சக நடிகரான விஷாலும் 'என் அப்பாவை போகவிடமாட்டேன்' என பதிவிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது வீடியோ வெளியிட்டுள்ள சதீஷ், 'நான் உணர்ச்சிவசப்பட்டு விலகுவதாக கூறிவிட்டேன். எனக்குள் பெர்சனலாக இருந்த கேள்விகளுக்கு பதில் கிடைத்துவிட்டது. இனி நான் கோபியாக பாக்கியலெட்சுமி சீரியலில் தொடர்ந்து நடிப்பேன்' என்று கூறியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.