''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
சின்னத்திரை நடிகர்களான விஷ்ணுகாந்தும், சம்யுக்தாவும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். அதிலும், சம்யுக்தா விஷ்ணுகாந்தை நினைத்து இன்ஸ்டாகிராமில் பல உருக்கமான பதிவுகளை வெளியிட்டிருந்தார். கடந்த மார்ச் 3ம் தேதி தான் இருவருக்கும் கோலாகலமாக திருமணமும் நடந்து முடிந்தது. அதன் புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், திருமணமான இரண்டே மாதங்களில் இருவரும் தங்களது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்த திருமண புகைப்படங்களை திடீரென நீக்கியுள்ளனர். அதுமட்டுமில்லாமல் காதலில் இருந்தபோது எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் நீக்கியுள்ளனர். இதுகுறித்து இதுவரை இருவருமே எந்தவொரு விளக்கமும் தரவில்லை. எனவே, கருத்துவேறுபாடு காராணமாக இருவரும் பிரிந்துவிட்டார்களா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.