கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் |

கருப்பு வெள்ளை கால சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான டி.ஆர்.மகாலிங்கம் சொந்தப் படங்கள் எடுத்து சோர்ந்து போனது அறிந்த கதைதான். ஏற்கெனவே நான்கு படங்கள் தயாரித்து, நான்கும் தோல்வி அடைந்த நிலையில் 5வதாக அவர் தயாரித்து நடித்த படம் 'விளையாட்டு பொம்மை'.
1954ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை டி. ஆர். ரகுநாத் இயக்கி இருந்தார். டி. ஆர். மகாலிங்கம், பி. ஆர். பந்துலு, வி. கே. ராமசாமி, கே. ஏ. தங்கவேலு, கே. சாரங்கபாணி, குமாரி கமலா, பேபி ராதா, ஈ. வி. சரோஜா, லக்ஸ்மி பிரபா உள்பட பலர் நடித்திருந்தனர். டி. ஜி. லிங்கப்பா இசை அமைத்திருந்தார்.
இந்த படத்தில் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்பதற்காக அப்போது ராசியான நடிகையாக கருதப்பட்ட குமாரி கமலாவை நாயகியாக்கினார். பாடல்களை சிரத்தை எடுத்து பாடினார். 'தீர்த்தக் கரையினிலே', 'மோகத்தைக் கொன்றுவிடு', 'விதிக்கு மனிதன் விளையாட்டு பொம்மை' போன்ற பாடல்கள் பெரும் வெற்றி பெற்றது.
படத்திற்கு முதலில் 'விளையாட்டு பிள்ளை' என்று டைட்டில் வைக்கப்பட்டது. ஆனால் இந்த டைட்டில் வெற்றியைத் தராது என்று ஜோதிடர்கள் கூறியதால் 'விளையாட்டு பொம்மை' என்று படத்தின் டைட்டிலையும் மாற்றினார். ஆனால் படம் தோல்வி அடைந்தது.