வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் |

செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள படம் ‛காந்தா'. பாக்யஸ்ரீ போர்ஸ், சமுத்திரகனி, ராணா டகுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வருகிற 14ம் தேதி படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ரிலீஸாகிறது. இப்படம் மறைந்த நடிகர் தியாகராஜ பாகவதர் மற்றும் பத்திரிக்கையாளர் லட்சுமி காந்தன் கொலை வழக்கு பின்னணியில் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கு தியாகராஜ பாகவதர் குடும்பத்தில் இருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இதுதொடர்பாக தியாகராஜ பாகவதரின் பேரன் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் இந்த படத்தில் தியாகராஜ பாகவதர் பற்றி தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தியாகராஜ பாகவதரின் சட்டப்பூர்வ வாரிசுகளிடமிருந்து அனுமதி வாங்கிய பின்பே படத்தை திரையிட வேண்டும் என்றும், அதுவரை இப்படத்திற்குத் தடை விதிக்க வேண்டுமென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பதிலளிக்க கோரி படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகரான துல்கர் சல்மானுக்கு உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தார்.