ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
விஜயகாந்தின் 100வது படமான ‛கேப்டன் பிரபாகரன்' நாளை மறுநாள் சுமார் 500 தியேட்டர்களில் ரீ-ரிலீஸாகிறது. இப்படம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இப்பட இயக்குனர் ஆர்கே செல்வமணி, தமிழ் சினிமாவை தற்போது அழித்து வரும் நிகழ்வு பற்றி பேசினார்.
அவர் கூறுகையில், ‛‛ஒருவர் 100 கோடி சம்பளம் வாங்கிவிட்டால் உடனே எனக்கும் ரூ.100 கோடி சம்பளம் வேண்டும் என நினைக்கிறார்கள். ஒரு படம் 1000 கோடி வசூலித்துவிட்டால் உடனே என் படமும் 1000 கோடி வசூலிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். நல்ல படம் நிச்சயம் ஓடும். ரசிகர்களுக்கு அதுபோன்ற படங்களையே நாம் தர வேண்டும். என் படம் ஓட வேண்டும் என நினைக்கலாம், ஆனால் அதை தாண்டி ஓடி விடக்கூடாது என நினைப்பது சரியல்ல. இந்த நோய் தான் தமிழ் சினிமாவை அழிக்கிறது. ஒரு நல்ல படம் நிறைய வசூலிக்கலாம். அதேசமயம் அதிகம் வசூல் செய்த படம் நல்ல படமாகிவிடாது'' என்றார்.