மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
சின்னத்திரை தொடரில் இணைந்து நடித்த அர்னவும், திவ்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சில மாதங்களுக்கு முன்பு அர்னவ் இன்னொரு நடிகையுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் போலீசில் புகார் செய்தார் திவ்யா. அந்த புகாரின் பேரில் அர்னவ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவரை விட்டு பிரிந்த திவ்யா அதன்பிறகு ஒரு குழந்தையை பெற்றெடுத்தார்.
இந்த நிலையில் அர்னவ் தன் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், திவ்யாவும், தானும் காதல் திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணத்திற்கு பின், சக நடிகையுடன் தனக்கு தொடர்பு இருப்பதாக பொய்யான புகார் கூறி, திவ்யா அடிக்கடி தன்னுடன் சண்டையிட்டதாக கூறியுள்ளார். திவ்யாவை தாக்கியதாகக் கூறுவது தவறு என்றும், அவர்தான் தன்னை துன்புறுத்தியதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது புகார் மீது நடவடிக்கை எடுக்காத போலீசார், திவ்யா அளித்த புகார் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. திவ்யா போலீசில் புகார் செய்தபோது திவ்யாவின் உடலில் ரத்த காயங்கள் இருந்ததற்கான மருத்துவ ஆவணங்கள் காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், அர்னவ் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கூடாது என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அர்னவ் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதாலும், குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டியுள்ளதாலும், தற்போதைய நிலையில் வழக்குகளை ரத்து செய்ய முடியாது எனக்கூறி அர்னவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.