தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” | ஜூன் மாதத்தில் ‛சர்தார் 2' படப்பிடிப்பு முடியும் ; மாளவிகா மோகனன் | காதலிக்க நேரமில்லை, தில், ராட்சசன் - ஞாயிறு திரைப்படங்கள் | நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி |
அயலி வலைதொடரின் மூலம் கவனம் ஈர்த்த காயத்ரி கிருஷ்ணன், சின்னத்திரையிலும் எதிர்நீச்சல் தொடரில் ஜான்சி ராணி கதாபாத்திரத்தில் மிரட்டி வருகிறார். தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டான காயத்ரிக்கு தற்போது பட வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்துள்ளது. இடையிடையே ஊடகங்களுக்கும் பேட்டி கொடுத்து வருகிறார். அவ்வாறாக சமீபத்திய பேட்டி ஒன்றில் காயத்ரியிடம் 'நிஜ வாழ்வில் குணசேகரன் யார்?' என்று கேள்வி கேட்கபட்டதாகவும், அதற்கு இயக்குநர் பாலா குணசேகரனை விட மோசமான ஆள் என்று காயத்ரி சொன்னதாகவும் செய்தி வெளியானது. அதேசமயம் காயத்ரி கிருஷ்ணன் யூ-டியூப் சேனல்களுக்கு அளித்த பல பேட்டிகளில் அவர் இயக்குநர் பாலாவுடன் ஒரு படம் நடித்தால் கூட போதும் என்ற அளவுக்கு பாலாவை உயர்வாக பேசியிருந்தார். எனவே, இதுகுறித்து அவரிடமே கேட்ட போது, 'நான் பாலாவுடன் இணைந்து பணியாற்ற ஆசைப்படுகிறேன். அதுமட்டுமே உண்மை. இயக்குநர் பாலாவை பற்றி நான் பேசியதாக பரவும் மற்ற செய்திகள் போலியானவையே' என்று விளக்கமளித்துள்ளார்.