விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் |
நடிகர் ஜெமினி கணேசனின் பேரனான நடிகர் அபிநய், சென்னை 28 பாகம் 2, ரமானுஜன் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் தமிழ்நாட்டில் அதிகம் பிரபலமானார். இவரது மனைவி அபர்ணா, மருத்துவ படிப்புக்கு சீட் வாங்கி தருவதாக கூறி நெருங்கிய தோழியிடமே பண மோசடி செய்துள்ள விவகாரம் சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
அபர்ணாவின் தோழியான மஞ்சு ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். அவரது மகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பதால் விரும்பிய கல்லூரி கிடைக்கவில்லை. இதைகேட்ட அபர்ணா, பிரபல மருத்துவ கல்லூரியில் தனக்கு நண்பர் இருப்பதாகவும் அவரிடம் 20 லட்சம் கொடுத்தால் சீட் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து அபர்ணாவின் வங்கி கணக்கிற்கு 5 லட்சம் ரூபாயை மஞ்சு செலுத்தியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட அபர்ணா, சீட் கிடைத்துவிட்டதாக போலி சான்றிதழ் தயாரித்து மஞ்சுக்கு அனுப்பியுள்ளார். சான்றிதழுடன் கல்லூரி அட்மிசனுக்கு சென்ற மஞ்சுவுக்கு கல்லூரி நிர்வாகத்தினர் போலி சன்றிதழ் என்று கூறி அட்மிசன் போட மறுத்துவிட்டனர். இதனால் மஞ்சு பணத்தை திருப்பி கேட்க, உஷாரான அபர்ணா தலைமறைவாகிவிட்டார். இதனையடுத்து மாம்பலம் காவல் நிலையத்தில் அபர்ணா மீது மஞ்சு புகார் அளித்துள்ளார். அபர்ணா மற்றும் அவருக்கு உதவிய அஜய் ஆகியோர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.