புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
நடிகர் ஜெமினி கணேசனின் பேரனான நடிகர் அபிநய், சென்னை 28 பாகம் 2, ரமானுஜன் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் தமிழ்நாட்டில் அதிகம் பிரபலமானார். இவரது மனைவி அபர்ணா, மருத்துவ படிப்புக்கு சீட் வாங்கி தருவதாக கூறி நெருங்கிய தோழியிடமே பண மோசடி செய்துள்ள விவகாரம் சோஷியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.
அபர்ணாவின் தோழியான மஞ்சு ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். அவரது மகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பதால் விரும்பிய கல்லூரி கிடைக்கவில்லை. இதைகேட்ட அபர்ணா, பிரபல மருத்துவ கல்லூரியில் தனக்கு நண்பர் இருப்பதாகவும் அவரிடம் 20 லட்சம் கொடுத்தால் சீட் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து அபர்ணாவின் வங்கி கணக்கிற்கு 5 லட்சம் ரூபாயை மஞ்சு செலுத்தியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட அபர்ணா, சீட் கிடைத்துவிட்டதாக போலி சான்றிதழ் தயாரித்து மஞ்சுக்கு அனுப்பியுள்ளார். சான்றிதழுடன் கல்லூரி அட்மிசனுக்கு சென்ற மஞ்சுவுக்கு கல்லூரி நிர்வாகத்தினர் போலி சன்றிதழ் என்று கூறி அட்மிசன் போட மறுத்துவிட்டனர். இதனால் மஞ்சு பணத்தை திருப்பி கேட்க, உஷாரான அபர்ணா தலைமறைவாகிவிட்டார். இதனையடுத்து மாம்பலம் காவல் நிலையத்தில் அபர்ணா மீது மஞ்சு புகார் அளித்துள்ளார். அபர்ணா மற்றும் அவருக்கு உதவிய அஜய் ஆகியோர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.