ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
தமிழ் தொலைக்காட்சிகளில் பல தரமான எண்டர்டெயின்மெண்ட் நிகழ்ச்சிகளை தயாரித்து வரும் விஜய் டிவி, அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்குவதுண்டு. அந்த வகையில் குக் வித் கோமாளி சீசன் 4-ல் சென்ற வாரம் காளையன், ஷெரின், கிஷோர் ஆகியோர் எலிமினேஷன் ரவுண்டுக்கு சென்றனர். அதில் கிஷோர் சுமாராக சமைத்ததாக கூறி கிஷோர் எலிமினேட் செய்யப்பட்டார். இந்நிலையில், யு-டியூப் சேனல் ஒன்று சிவாங்கிக்கு பதில் கிஷோர் வெளியேற்றப்பட்டது போலவும், அதை கிஷோரே நேர்காணலில் சொல்வது போலவும் டைட்டில் வைத்து ஒரு வீடியோ வெளியிட்டிருந்தது. பேன் பேஜ் ஒன்றிலும் 'சிவாங்கிக்கு பதில் என்ன துரத்திட்டாங்க. கழுவி ஊற்றிய கிஷோர்' என்ற கேப்ஷனுடன் அந்த வீடியோ பகிரப்பட்டிருந்தது. வைரலான அந்த பதிவை பார்த்து பலரும் விஜய் டிவியையும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியையும் வசை பாடினர். இதுகுறித்து தகவல் அறிந்த கிஷோர் அந்த பதிவின் கீழ், 'தயவு செய்து இதை டெலிட் செய்து விடுங்கள். நான் எந்த பேட்டியும் கொடுக்கவில்லை. அந்த செய்தி போலியானது. போலி செய்திகளை நீக்கிவிடுங்கள்' என்று பதிவிட்டுள்ளார். இதனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் எலிமினேஷன் குளறுபடி ஒருவழியாக முடிவுக்கு வந்தது.