'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 அண்மையில் முடிவுக்கு வந்தது. பிரபலங்களுக்கிடையே நடைபெற்ற கடுமையான போட்டியில் ரசிகர்களின் பேவரைட் ஜோடிகளான அமீர் - பாவ்னி மற்றும் சுஜா வருணி - சிவா என இருவருமே வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர். பரிசுத்தொகையான 5 லட்சம் 2 ஜோடிகளுக்கும் சமமாக பிரித்து கொடுக்கப்பட்டது. இந்நிலையில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் போது சுஜா வருணி - சிவா ஜோடிக்கு ஏற்பட்ட துயரமான சம்பவம் பற்றிய தகவல் சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது சுஜா வருணி கர்ப்பமாக இருந்துள்ளார். எனினும், மருத்துவரின் அறிவுரையின் படி தொடர்ந்து நிகழ்ச்சியில் நடனமாடியிருக்கிறார். ஆனால், ஒருநாள் நிகழ்ச்சியின் அவருக்கு உடல்சுகவீனம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சுஜா வருணியின் கரு கலைந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால், ஜோடிகள் இருவரும் சோகத்தில் மூழ்கினர். இருப்பினும் முழு உழைப்பை செலுத்தி அந்த துன்பத்தில் இருந்து வெளிவந்ததாகவும், அந்த உழைப்புக்கு கிடைத்த வெற்றி தான் இந்த டைட்டில் வின்னர் பட்டம் என சுஜா வருணி - சிவா தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.
இவர்களது வெற்றியை பலர் பாராட்டி வந்தாலும், குழந்தை வயிற்றில் இருக்கும் போது இப்படி ரிஸ்க் எடுத்ததே தவறு என விமர்சித்தும் வருகிறார்கள்.