கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மினி 'ஆனந்தம்' படம் போல பல குடும்ப ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்து வருகிறது. இதில், கதாநாயகர்களின் அம்மாவாக லெஷ்மி என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஷீலா நடித்து வந்தார். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் இந்த லெட்சுமி கதாபாத்திரம் இறப்பது போல் காண்பிக்கப்பட்டது. அதுமட்டுமில்லாமல், உண்மையான இறுதிச்சடங்கு நடப்பது போலவே ஷூட் செய்யப்பட்டு சரவண விக்ரமுக்கு உண்மையாகவே முட்டையடிக்கப்பட்டது. அவரும் நடிப்பில் தூக்கலாக பெர்மான்ஸ் செய்ய அந்த எபிசோடு சூப்பர் ஹிட்டாகி டிஆர்பியிலும் எகிறியது. ஆனால், கதைப்படி லெஷ்மி கதாபாத்திரம் இறந்துவிட்டாலும் நடிகை ஷீலா இன்னும் சீரியலை விட்டு முழுமையாக விலகவில்லை. அடிக்கடி ரீ என்ட்ரி கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், முதன்மை நாயகி சுஜிதாவுடன், ஷீலா நிற்பது போன்ற புதிய புகைப்படம் தற்போது வைரலாகி ஷீலா ரீ-என்ட்ரி என்கிற செய்தி இணையத்தில் பரவி வருகிறது. குடும்பத்து உறுப்பினர்களுடன் கனவிலோ, பளாஷ்பேக் சீனிலோ லெஷ்மி அம்மாள் வந்து பேசுவது போல் அடிக்கடி காட்சிகள் ஒளிபரப்பாகி வரும் நிலையில், ஷீலா தற்போது எந்த கனவிற்காக ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் என்பது தெரியவில்லை. இந்த ரீ-என்ட்ரி பதிவுகளை பார்த்து கடுப்பான நெட்டிசன்கள் 'இதுக்கு பேசாம பருத்தி மூட்டை குடோன்ல இருந்திருக்கலாம்' என லெஷ்மி அம்மாவை இறந்ததாக காட்டியதை கிண்டலடித்து கலாய்த்து வருகின்றனர்.