மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
சின்னத்திரை இயக்குநர் திருசெல்வம் நீண்ட நாட்களுக்கு பிறகு கம்பேக் கொடுத்திருக்கிறார். பெண் ஆளுமையை பறைசாற்றும் வகையில் முன்னதாக இவர் இயக்கியிருந்த 'கோலங்கள்' சீரியல் சூப்பர் ஹிட்டானது. தற்போது அதே கான்செப்ட்டில் 'எதிர்நீச்சல்' என்ற தொடரை இயக்கி வருகிறார். இல்லத்தரசிகளை தாண்டி இளம் தலைமுறையினரையும் கவரும் வகையில் இந்த தொடர் மிகவும் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கில் 'உப்பென்னா' என்ற பெயரிலும் மலையாளத்தில் 'கனல்பூவு' என்ற ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், மிக விரைவில் கன்னடத்திலும், வங்காள மொழியிலும் எதிர்நீச்சல் சீரியல் ரீமேக் செய்யப்பட உள்ளது. கயல் சீரியலுக்கு அடுத்தப்படியாக 'எதிர்நீச்சல்' தான் அதிக மொழிகளில் ரீமேக் ஆகும் சீரியல் என்பது குறிப்பிடத்தக்கது.