காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! | புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? | கலகலப்பு 3ம் பாகத்தில் மீண்டும் விமல்? | லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்! | மெய்யழகன் படத்துடன் இணைந்த சர்தார் 2! | நேருக்கு நேர் மோதும் அஜித், சூர்யா படங்கள்! | படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் |
தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி இன்று சினிமாவில் கால் பதிக்க போராடிக்கொண்டிருப்பவர் நடிகர் ப்ரஜின். இவர் தனது சக தோழியான சாண்ட்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சாண்ட்ராவும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் சில காலங்கள் நடித்துவந்தார். அதன்பின் அவர் பெரிதாக திரையில் தோன்றவில்லை. இந்த க்யூட்டான ஜோடிக்கு மித்ரா, ருத்ரா என அழகான இரட்டை குழந்தைகளும் உள்ளது.
இந்நிலையில் பல நாட்களாக சாண்ட்ராவை யாரும் திரையிலோ, சோஷியல் மீடியாக்களிலோ பார்க்காத நிலையில் அவரது புகைப்படத்தை ப்ரஜின் பகிர்ந்துள்ளார். அதில், 'இரட்டை குழந்தைகளின் அம்மா காபியுடன் ரிலாக் செய்து கொண்டிருக்கிறார்' என கேப்ஷனும் போட்டுள்ளார். சாண்ட்ராவின் புகைப்படத்தை நீண்ட நாட்கள் கழித்து பார்த்த வீஜே தியா மேனனும் 'நீண்ட நாட்கள் கழித்து உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி சேச்சி' என கமெண்ட் அடித்துள்ளார். அதுபோல் ரசிகர்கள் பலரும் சாண்ட்ராவை நலம் விசாரித்து வருகின்றனர்.