வெகுளித்தனமாக பதில் சொல்லி குஞ்சாக்கோ போபனுக்கு சங்கடத்தை கொண்டு வந்த டூப் ஆர்ட்டிஸ்ட் | விடாப்பிடியாக நின்று மோகன்லாலை சந்தித்த 80 வயது ரசிகை | பிளாஷ்பேக்: மொழி மாற்றம் செய்து வியாபாரப் போட்டியில் வென்று காட்டிய ஏ வி எம்மின் 'அரிச்சந்திரா' | ரஜினி பட இயக்குனர் யார் ? பரவும் தகவல்கள் | அன்பே வா, அவள் வருவாளா, நம்ம வீட்டுப் பிள்ளை - ஞாயிறு திரைப்படங்கள் | சம்பளத்திற்காக மிரட்டும் நடிகை | நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? |

தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி இன்று சினிமாவில் கால் பதிக்க போராடிக்கொண்டிருப்பவர் நடிகர் ப்ரஜின். இவர் தனது சக தோழியான சாண்ட்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சாண்ட்ராவும் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் சில காலங்கள் நடித்துவந்தார். அதன்பின் அவர் பெரிதாக திரையில் தோன்றவில்லை. இந்த க்யூட்டான ஜோடிக்கு மித்ரா, ருத்ரா என அழகான இரட்டை குழந்தைகளும் உள்ளது.
இந்நிலையில் பல நாட்களாக சாண்ட்ராவை யாரும் திரையிலோ, சோஷியல் மீடியாக்களிலோ பார்க்காத நிலையில் அவரது புகைப்படத்தை ப்ரஜின் பகிர்ந்துள்ளார். அதில், 'இரட்டை குழந்தைகளின் அம்மா காபியுடன் ரிலாக் செய்து கொண்டிருக்கிறார்' என கேப்ஷனும் போட்டுள்ளார். சாண்ட்ராவின் புகைப்படத்தை நீண்ட நாட்கள் கழித்து பார்த்த வீஜே தியா மேனனும் 'நீண்ட நாட்கள் கழித்து உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி சேச்சி' என கமெண்ட் அடித்துள்ளார். அதுபோல் ரசிகர்கள் பலரும் சாண்ட்ராவை நலம் விசாரித்து வருகின்றனர்.




