அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று பல சீரியல்களில் நடித்து வருபவர் ஸ்ரீநிதி. வலிமை படத்திற்கு விமர்சனம் செய்ததால் ரசிகர்கள் பலரும் ஸ்ரீநிதியை திட்டித்தீர்த்தனர். அதன்பிறகு அடிக்கடி பல சர்ச்சையான கருத்துகளை கூறி வந்த ஸ்ரீநிதி நடிகர் சிம்பு தன்னை காதலிப்பதாக கூறி, சிம்பு வீட்டின் முன் போராட்டம் நடத்தி சர்ச்சைகளை கிளப்பினார். அதுமட்டுமில்லாமல் நடிகை நக்ஷத்திராவின் காதலரால் நக்ஷத்திராவிற்கு ஆபத்து என்று கூறியும், சித்ராவை நினைவுப்படுத்தியும் பேசியிருந்தது சமூக ஊடங்கங்களில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு நக்ஷத்திராவும் அவரது காதலரும் தனித்தனியே விளக்கமளித்திருந்தனர். இதனைத்தொடர்ந்து ஸ்ரீநிதியின் அம்மாவும் அவளது நடவடிக்கை சரியில்லை என ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள சிகிச்சை மையத்தில் ஸ்ரீநிதி அனுமதிக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. புழல் பகுதியில் அமைந்துள்ள அந்த மருத்துவமனையில் ஸ்ரீநிதிக்கு கவுன்சிலிங் மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிய வருகிறது.