மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
விஜய் டிவியின் 'நாம் இருவர் நமக்கு இருவர்' தொடரில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார் ராஷ்மி ஜெயராஜ். தொடர்ந்து ராஜபார்வை சீரியலில் மீண்டும் கம்பேக் கொடுத்திருந்த ராஷ்மி, அந்த சீரியல் முடிந்த பின் ரிச்சு என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். அதன்பிறகு சீரியலில் மீண்டும் நடிக்காத ராஷ்மி கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்தார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஷ்மிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுடன் சமூக வலைதளம் மூலம் பகிர்ந்து கொண்ட ராஷ்மி ஜெயராஜ், அன்றைய தினத்தில் தனது கணவருக்காக சிறப்பு தந்தையர் தின வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். ராஷ்மிக்கு அவரது குழந்தைக்கும் பலரும் வாழ்த்துகளையும் ஆசிர்வாதங்களையும் தெரிவித்து வருகின்றனர்.