100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் | எனக்கு என்ன ஆச்சு ? நஸ்ரியா தன்னிலை விளக்கம் | பிரபாஸ் படப்பிடிப்பில் மிதுன் சக்கரவர்த்திக்கு ஏற்பட்ட கைமுறிவு | கொச்சியில் புது வீடு கட்டினார் நிமிஷா சஜயன் | 'கூலி, 45' ; ஒரேநாளில் வெளியாகும் உபேந்திராவின் 2 படங்கள் | நடிகை ஜனனி திருமண நிச்சயதார்த்தம் ; விமான பைலட்டை மணக்கிறார் | விஜய் டிவி பிரியங்கா 2வது திருமணம் : மாப்பிள்ளை யார் தெரியுமா...! | பாலோயர்ஸ்: உண்மையைப் பேசியுள்ள பூஜா ஹெக்டே | ரீ-ரிலீஸில் வரவேற்பைப் பெறுமா 'சச்சின்' | நஷ்டஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்: 'குட் பேட் அக்லி' தயாரிப்பாளர் விளக்கம் |
விஜய் டிவியின் 'நாம் இருவர் நமக்கு இருவர்' தொடரில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார் ராஷ்மி ஜெயராஜ். தொடர்ந்து ராஜபார்வை சீரியலில் மீண்டும் கம்பேக் கொடுத்திருந்த ராஷ்மி, அந்த சீரியல் முடிந்த பின் ரிச்சு என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். அதன்பிறகு சீரியலில் மீண்டும் நடிக்காத ராஷ்மி கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்தார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஷ்மிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களுடன் சமூக வலைதளம் மூலம் பகிர்ந்து கொண்ட ராஷ்மி ஜெயராஜ், அன்றைய தினத்தில் தனது கணவருக்காக சிறப்பு தந்தையர் தின வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். ராஷ்மிக்கு அவரது குழந்தைக்கும் பலரும் வாழ்த்துகளையும் ஆசிர்வாதங்களையும் தெரிவித்து வருகின்றனர்.